சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

சுப்ரபாரதிமணியன் கவிதைகள்



1.புறாக்கள் இந்தபக்கம் பறந்து
ரொம்ப நாட்களாகிவிட்டன.
காக்கை கூட தென்படுவதில்லை
கழுதை என்பது ஒரு பிராணியா
மகள் கேட்டாள்.வீட்டிற்கு செல்வது
துயரமானதுவெளியில் அலைந்து
திரிவது இன்னமும்.அடையாளம்
காணமுடியாதபடிசாயம் அரிித்துவிட்டது
முகத்தை.முகத்தில் மரணம் சரியாக
முத்திரை குத்தியிருக்கிறதுஎன்
கண்களின் உயிர் அற்ற ஒளியை
வாங்கிகுருடாக்கிகொண்டவர்கள்பயந்தபடி
விலகி போகிறார்கள்.நினைவுகளை
தழுவியபடிநண்பர்கள் கடந்து போகிறார்கள்.
மரணம் எதேச்சையானது என்று நழுவுகிறார்கள்
மரணத்தின்மூலம் யாவருக்கும்
துணுக்குறச் செய்கிறவை.சுற்றிலும்
சமாதிகளின் மீதான வெட்டுப்படாத
செடிகளின் பச்சையம்.2.முன்பிருந்த
நகரத்துத் தெருக்களில்நாய்களும்
கழுதைகளும் தென்பட்டதில்லை.
வாகன இரைச்சல் தலைக்குள்
புகுந்தயானையின் ஆட்டமாய்.
நாயின் குறைப்பைக் கேட்கக்கூட
வலிமையான வீடுகளுக்குதான்
போகவேண்டும்.தெருக்களில்
என்னோடு கை கோர்க்க ஆளில்லா
விட்டாலும் இணை செல்ல நாயாவது
அகப்படாதா என அலைந்ததுண்டு.
வாகனம் அரைத்த மாவாய்
வீதிகளில்உயிர்களை அவ்வப்போது
கண்டதுண்டுஇந்த ஊருக்கு வந்த
புதிதில்நாய்களும், கழுதைகளும்
தெருவில் நடமாடும் காட்சிமகிழ்ச்சி
தந்ததுஆனால் விரையும் வாகனங்களின்
இரைச்சல் இல்லாமலில்லைமிரளும்
சிறு மிருகங்களாய் மனிதர்கள்
சட்சட்டென வாகனங்கள் அறைந்து
எலும்புகள் குவிந்துமலமும்
ரத்தமுமெனஉருத்தெரியாமல்.
நாய்களையும்,பூனைகளையும்
கழுதைகளைகளையும் காண்பது
சமீபமாய் போயிற்றுஇன்னும்
நாய்களும், கழுதைகளும்
விரைந்து பறக்கும் சேவலும்
தெருவோடு காட்சி என்பது
ஆறுதல்தான்வாகனம் அறைய
அவை காத்திருக்கின்றன என்றாலும்.

========================================

வரிசையிலிருந்துதள்ளி நிற்பதுதான்

சுவாரஸ்யமாயிருக்கிறது

தாறுமாறாய் நிற்பதில்

இன்னும் மகிழ்ச்சி.

வரிசை அடையாளத்திற்கான

அங்கீகாரத்தை வேண்டிக்

கொண்டே நிற்கிறேன்.

உறுமி அதிகார வார்த்தைகளைத்

துப்பும்எவனும் பக்க மில்லை

இப்படி இருப்பது ஒழுங்குதான்

அது எனக்குச் சில சமயம்

பிடித்தும்சில சமயம் பிடிக்காமலும்.

என்னை மிருகமாக்கிவிடமுடியாது

ஒரு வரிசையின் ஒழுங்குற்குள்

என்னைக் கொண்டு வருவதின் மூலம்.

வரிசை சென்றடைகிற இடத்தில்

இருப்பவன்அசல் மிருகம் போலத்தான்.

அடைபட்ட கம்பிகளுக்குப்

பின்னால் இருக்கிறான்.

உறுமலில் பொறி பறக்கிறது

அவன் இடத்தை அடைவதற்காய்

ஒவ்வொருவரும் போட்டி போடுகின்றனர்.

இது போல் பல வரிசைகள்பல

கட்டிடங்களில் பல தெருக்களில்.

இந்த உருவத்துடன் வரிசைகளில்

நிற்பதுசிரமமாய் இருக்கிறது.

உங்கள் உருவத்துடன்யாராவது

நிற்கக்கூடும்.அடையாளம் கண்டும்

நகர்ந்து விடுங்கள்

அதுதான் சுவாரஸ்யம்.