சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

நூல் விமர்சனம்

- நகரம் - 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
கல்பனா சோழன்
அரசியல், மத கலவரங்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போடும் கலவரத்தைக் கண்முன் காட்டுவதில் கை தேர்ந்தவர் சுப்ரபாரதிமணியன். அதற்கு 'நகரம் - 90 ' இன்னொரு சான்று. ஹூசேன் சாகர் ஏரி பழைய, புதிய நகரங்களை பரபரப்பிலும், சாவிலும் பிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில் ஒன்றை சித்தரிக்கிறது நகரம்-90. வேறு வேலைகள் அற்று புரளிகளும் பயமுமே ஆக்ரமித்த கர்ஃப்யூ காலத்து வாழ்க்கையின் பயங்கரத்தை மிக துல்லியமாக உணர்த்துகிறது.
'அரசியல்வாதியோட உயிர் வாழ்க்கையோட சுகபோகங்களையெல்லாம் அனுபவிக்கப் பொறந்தது. சாமான்ய ஜனங்களோட உயிர் அவங்களோட பீடங்களுக்குப் படிக்கட்டுகள் ' என்ற நிதர்சனத்தை, அழுத்தந்திருத்தமாய், உரத்துச் சொல்கிறது நகரம்-90.
குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் குறு நாவலோடு, கொசுறாய் சில சிறுகதைகளும் நகரம் - 90 என்ற இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.
விதவிதமான ஹேர்ஸ்டைலில் வழுக்கையை மறைக்கும் மனிதன் மனைவியின் மனதைப் புரிந்து கொண்டபின் 'விக் 'கை விட்டு விடும் 'தோற்றங்கள் ', ஒற்றை ஆளாகக் குடும்பத்தை சுமக்கும் குடும்பத் தலைவி யார் கண்ணுக்கும் படாமல் போய் விடத் தவிக்கும் 'தொலைதல் ' போன்ற சிறுகதைகள் இவற்றில் உண்டு.
மத்திய தர மக்களது போராட்ட வாழ்க்கை மற்றும் மனப்போராட்டங்களை, எளிய நடையில், இயல்பாய் விவரிக்கும் சுப்ரபாரதி மணியனின் ஆற்றலுக்கு நகரம்-90 ஒரு சான்று. 108 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்பு நூல் குமரிப் பதிப்பக வெளியீடு.