சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 31 ஜனவரி, 2009

சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா?

சுந்தர் அர்னவா (பக்ருதீன் அலி அகமது)
------------------------------------------- -----------
கமண்டலத்தில் நதி (நன்றி : கலாப்ரியா கவிதை)
-------------------------------------------------

சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி பற்றி ஜெயந்தி சங்கரின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது. அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.

துயரம் என்பது எப்படி வரும். உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படியெல்லாம் வருகிறது செல்லம்மிணிக்கு. செல்லமணியின் துயர நதி - அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

செல்லம்மிணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷ னோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்த நாவல். செல்லம்மிணியின் பல மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங் கள்கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித் தான் வாழ்வு அமைகிறது. சொக்கன் என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? சொக்கன் செல்லம்மிணியை விட்டுச் செல்லக் காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லம்மிணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான். நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில் கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்ணீர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடு தலித்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்டுகளும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்துவிடும் அபாயத்தை தருகிறது.

நாவலில் செல்லம்மிணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களைச் சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது. செல்லம்மிணி வாழ்வோடு - எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன. அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவர்களின் காமம், இளம் பெண் களின் தேவை என்ற உறவு நிலை - மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது. வக்கீல், செல்லம்மிணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார் அவள் வாழ்வில் வருவதை - அந்த வன்புணர்ச்சி நிகழ்வை விவரிப்பது - இன்னும் துயரம் மிக்க அவள் உடல் வலியையும், மனவலியையும் - இன்றும் பதிவு செய்ய வேண்டியது.

செகந்திராபாத் ஜுலியின் வாழ்வுகூட நமக்கு புது அனுபவமே. இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வரவேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்... நவீன கதை சொல்லல் முறையும் - வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் ஓடும் நதி.


ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

- பால்கி மாநில செயலாளர் SNEA - BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு

சென்னை அம்ருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான ஓடும் நதி வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக் கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன். சென்ற திண் ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கு:ம தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடைமைவாதிகள் மீதான சாதீய விமர்சனம் போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.

நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப் போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டுவரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதற்பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறச்சூழல் அக்கறை பல சமயங்களில் வாசக ருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம் - இரசாயன நெடி - தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினைச் சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினைப் பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.

செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்தக் காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லம்மிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர். படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாக ஏற்படும் அதிர்வுகளாக நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழி தெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடி சத்தங்கள் அதிக மாக இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப் பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறாள் பெண் என்பதை இந்நாவலின் மையப்பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத் துக்களில் தன் மனசாட்சியை பேச வைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டுவந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.

நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப் பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதி யின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்தி ருப்பது லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லையோ நாவலின் மூலம் ஓடும் நதியின் இயல்லை உணர்ந்திருக்கிறோம்.

(ஓடும் நதி அமிர்தா, சென்னை ரூ. 150)