சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 18 ஏப்ரல், 2009

அசோகமித்திரன் 77: தொகுப்பு:- சுப்ரபாரதிமணியன்


அசோகமித்திரன் 77:

தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்

முன்னோடிகளற்ற புதிய எழுத்துப் பாணி அசோகமித்திரனுடையது. பிரக்ஞை பூர்வமான எளிமை, தாமரையிலை நீர்த்தன்மை,காயப்படுத்தாத எள்ளல் இவையே அவருடைய தனித்தன்மை. வாழ்வின் மீதான அக்கறை , கவலை, மனிதாபிமானம், அன்பு, முதிர்ச்சி, பக்குவம், மற்றுக் உலக இலக்கியத்தில் அவர் கொண்டிருக்கிற தேர்ச்சி, அதன் நேரடி அனுபவம் ஆகியவை அவருடைய படைப்புகளுக்கு ஒளியும் கனமும் சேர்க்கின்றன. எனவேதான் எளிதே போல் தோன்றும் அவருடைய எழுத்துப் போக்கு எவருக்கும் கை வராததாகிறது.


" அசோகமித்திரன் 77 " நூல் அவரைப்பற்றிய 22 கட்டுரைகள் கொண்டதாகும். அவற்றினை பிரபஞ்சன், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன் , நகுலன், விட்டல்ராவ், கே எஸ் சுப்ரமணியன், சூர்யராஜன், ஜெயமோகன், ஞானி, சு வேங்கட்ராமன் , திலீப்குமார், தமிழவன்,சிங்கப்பூர் ரெ.பாண்டியன், அரவிந்தன், ஜ“ முருகன், ஆனந்த் நடராஜன், செந்தூரம் ஜெகதீஸ், ஆர் பி ராஜநாயஹம் ஆகியோர் எழுதியுள்ளனர்.


சுப்ரபாரதிமணியனின் " கனவு " இதழ் 1994 ம் ஆண்டு வெளியிட்ட " கனவு = அசோகமித்திரன் விமர்சன மலரில் " இடம் பெற்ற கட்டுரைகளும், மற்றும் சில கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.


இந்த நூலின் வெளியீட்டு விழா திருப்பூரில் ஞாயிறன்று மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் வரவேற்புரை வழங்கினார். வழக்கறிஞர் ரவி தமிழிசைப் பாடல்களைப் பாடினார்.

கலை இலக்கியப் பேரவை தலைவர் வி டி சுப்ரமணியன் " அசோகமித்திரன் 77 " நூலை வெளியிட தாய் தமிழ் பள்ளி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் முத்துசாமி வெளியிட்டார்.

நூலைப்பற்றி ஆர் பி ராஜநாயகம், சுப்ரபாரதிமணியன் உரையார்றினர்.

"கனவு " வெளியிட்ட " மெய்ப்படும் கனவுகள் " என்ற திருப்பூர் கவிஞர்கள் 31 பேரின் கவிதைகள் அடங்கிய நூல் குறித்து பேராசிரியை புவனேஸ்வரி விமர்க் கட்டுரை வாசித்தார். தாண்டவக்கோன், சுபமுகி, ஜெயபால் , சிவதாசன், ஜோதி, பக்குதீன் அலி அகமது, மூர்த்தி

ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். ஜோதிகுமாரின் " வறுமையின் கனவு", ராகுல் நகதாவின், " தூரம் அதிகமில்லை "., கார்த்திகேயனின், " கந்தல் " ஆகிய குறும்படங்கள் வெளியிடப்பட்டன.


" அசோகமித்திரன் 77 நூலை சென்னை அமிர்தா பதிப்பகம்

வெளியிட்டுள்ளது விலை ரூ 90.

thinnai செய்தி :issundarakannan7@gmail.com