சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 6 அக்டோபர், 2009

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி "

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி " ==============================================


பெங்களூரில் சாகித்திய அக்காதமி மொழிபெயர்ப்பு பரிசளிப்பு விழாவின் போது " அபிவ்யக்தி" நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.தமிழ் கதை வாசிப்பு நிகழ்ச்சியில் ‌
இந்திரனின் கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.Diary of husband என்ற அக்கதையில் வரும் ராஜலட்சுமிக்கு மற்றவர்களின் டைரிகளைப் படிப்பது தவறு என்று தெரிந்தாலும் அவற்றைப் படிப்பதில் சுவாரஸ்யம் கொண்டவள். அவளின் கண‌வன் டைரி அப்படித்தான் அவளுக்கு. அதில் இருக்கும் ஒரு பெண்ணின் படம் அவளுக்கு பல கற்பனைகளை தருகிறது. தூங்கமுடியாமல் அவஸ்தைப்படுகிறாள். டைரி கடலில் மிதந்து ஆச்சர்யப்படுத்துகிறது சத்தமாகப் படிக்கும் தஙக‌ மீன். சப்தமில்லாமல் படிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆண், பெண் பட்டாம்பூச்சிகள் வெவ்வேறு மணங்களுடன் மிதந்து ஆரவாரிக்கின்றன.பேன்டசி உலகில் தவிக்கிறாள் . கனவு கலையும் போது
" யாருக்காக அழுதாய் " என் கேட்கப்படுகிறது. சுவாரஸ்யமான கதை. இந்திரன் இதை தமிழில் பிரசுரிக்கலாம்.



சிற்பி பால‌சுப்ர‌ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளின் " பெல்ஜிய‌ம் க‌ண்ணாடி" உடைந்து போகிற‌ போது எழுப்பும் நினைவ‌லைக‌ள் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துப‌வை. ச‌ல்மாவின் க‌விதை வ‌ழ‌க்க‌ம் போல் உட‌ல‌ர‌சிய‌ல் பேசிய‌ திரும்ப‌த் திரும்ப‌ வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதை.ப‌ரிசு பெற்ற‌ கொங்க‌னி நூல் திருக்குற‌ளை மொழிபெய‌ர்த்த‌ற்காக‌. த‌மிழ் நவீன‌ இல‌க்கிய‌ம் அவ‌ர்க‌ளை எட்டாத‌த‌ற்குக் கார‌ண‌ம் முறையான‌ ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் பெருமளவில் இல்லாத‌தே.சுவ‌ர்ண‌ஜிட் சாவியின் ப‌ஞ்சாபி கவிதை ஓவியத்தன்மை கொண்டிருந்த்து. கன்னடத்து கம்பாரின் நாட்டுப்புறப்பாடல் நவீனத்துவத்துடனும் இசையுடனும் சிறந்து விளங்கியது." மர நிழல் குளத்தில் விழுகிறது.மர வேர் நிழ்லின் வேரில் தொடங்கி..."
சனியாவின் மராத்திக் கவிதை சாதாரண விசயங்களுக்கெல்லாம் சண்டை போடும் தம்பதிகள் பற்றியது.வெகு சுவாரஸ்யாமானது.‌ வெவ்வேறு ப‌ரிமாண‌ங்களையும், அனுபவங்களையும் கொண்டதாக கதை, கவிதை வாசிப்புகள் இருந்தன.

செனனையில் ந‌டைபெற்ற‌ இரு சா. அ. நிக‌ழ்ச்சிக‌ள்:

1. " என‌னை செதுக்கிய‌ நூல்‌க‌ள் " உரை: ராஜேந்திர‌ன் ( துணைவேந்த‌ர், த‌ஞ்சைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் )

2.ப‌ன்மொழிப்புல‌வ‌ர் கா. அப்பாதுரையார் நூற்றாண்டு விழா

க‌ட்டுரையாள‌ர்க‌ள் : இராம‌ குருநாத‌ன், சிற்பி, அலெக்சாண்ட‌ர் ஜேசுதாச‌ன், இந்திர‌ன், அறிவுந‌ம்பி, செய‌தேவ‌ன் , மா ரா அர‌சு, இரா மோக‌ன், அந்ததோணி டேவிட்நாதன், மு முத்துவேல்
.================================