சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 23 மார்ச், 2010

கென்லோச்சின் தபால்காரன்


இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இங்கிலாந்தின் கென்லோச் நன்கு அறிமுகமானது அவரது புரட்சிகரப் படங்கள் மூலம்தான். அவற்றைப் பற்றி விரிவாய்;j தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவரிடமிருந்து நகைச்சுவையுடனான ஒரு படம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதே. இங்கிலாந்து தொழிலாளர் கட்சியில் 1960ல் சேர்ந்தவர். 1990 வரை கட்சி செயல்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டவர். பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றவர். பாலஸ்தீன பிரச்சினை குறித்த பல்வேறு எதிர்ப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்றவர். இவரின் ‘தி லேண்ட் அன்ட் பிரிடம்’ மிக முக்கியமான படமாகும். கார் என்ற பொதுவுடைமை இயக்கத் தோழரின் மரணத்தையொட்டி அவரின் பேத்தி அவரின் உடைமைகளைப் பரிசோதிக்கிறாள். டைரிக் குறிப்புகள், ஆவணங்கள் பல செய்திகளைச் சொல்கின்றன. ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாஸிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட படையில் இருந்தவர் கார். அப்போராட்டத்தை அப்படம் விளக்குகிறது. போராட்டக் குழுக்களுக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள், விவாதங்கள், பொதுவுடைமைத் தத்துவச் சிக்கல்களை அப்படம் விவாதித்தது. கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் த பார்லி’ அயர்லாந்து விடுதலைப் போராட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது. இவ்விரு படங்களும் இந்திய ரசிகர்களுக்கு வெகுவாகப் பரிச்சயமான படங்கள். இவை இரண்டும் பொதுவுடைமை வட்டங்களில் அதிகம் பேசப்பட்டவை. இவருடைய ‘கேஸ்’ என்ற படம் சிறந்த 100 பிரிட்டிஷ் படங்களில் தலையாயதாக விளங்குவதாகும். இதையொட்டி நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படம் வெளிவந்த 40 ஆண்டுகள் ஆவதையொட்டி சில முக்கிய நிகழ்வுகளும் சென்றாண்டு நடைபெற்றன. பில்லி என்ற பதின்பருவ மாணவன் பள்ளியில் புறக்கணிக்கப்படுபவன். மூத்த சகோதரனால் துன்புறுத்தப்படுபவன். அம்மாவின் கவனிப்பும் போதவில்லை. அவனுக்கு நட்பு கொள்ள இருக்கும் ஒரு பறவையுடனான அவனின் அனுபவங்களைச் சொல்லும் படம் ‘கேஸ்.’ சென்றாண்டு மெல்போர்ன் திரைப்படவிழாவில் இஸ்ரேல் சில நிகழ்ச்சிகளுக்கு ‘ஸ்பான்சர்’ செய்திருந்த காரணத்தால் தனது படங்களைத் திரையிட வேண்டாம் என்று திரும்ப பெற்றுக் கொண்டவகையில் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்குத் தொடர்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தவர். இவர் ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியரஸ் டமியுடன் இணைந்து இயக்கிய ‘டிக்கெட்’ என்ற படம் புகைவண்டிப் பயணத்தில் அகதிகளின் நிலைமையை மையமாகக் கொண்டிருந்தது.
இவரிடமிருந்து இவ்வாண்டின் படம் ‘லுக்கிங் பார் எரிக்’ நகைச்சுவை கலந்த படம் என்ற விபரமே ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய ‘ரெயினிங் ஸ்டேன்ஸ்’ என்ற படம் நகைச்சுவை அம்சங்களைக் கொண்டிருந்தது. மான்செஸ்டரைச் சார்ந்த வேலையில்லாத தகப்பனான பிரதான கதாபாத்திரம் சிறு சிறு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. மகளுக்கு ஒரு சடங்கு, ஆடை வாங்கப் பணமில்லாமல் சிரமப்படுகிறார். பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதைச் சித்தரிக்கும் படமாகும் அது. அதில் வரும் ஒரு வசனம், ‘நான் பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடவில்லை. நானே பாட்டாளி வர்க்கம்தான்..’
இவரின் நாற்பது வருடத் திரைப்பட இயக்கத்தில் இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்கப் பிரச்சினைகளும், சமூகப் பிரச்சினைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ‘லுக்கிங் பார் எரிக்’ படத்திலும் தபால்காரர் ஒருவரை முன்வைத்து நகைச்சுவைத் தன்மையுடன் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பற்றிய விமர்சனமாகவே படத்தை கென்லோச் அமைத்திருக்கிறார். எரிக்கின் குடும்ப வாழ்க்கை சோர்வு தருவதாக இருக்கிறது. இரண்டாவது திருமணமும் தோல்வியடைந்து விட்டது. முதல் மனைவி மூலமாகப் பதின்பருவ பையன்கள் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாதபடி இருக்கிறார்கள். ஒரு பையன் உள்ளூர் தாதா கும்பலுடனான பழக்கத்தில் ஒரு துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைக்கிறார். அதைத் தேடி காவல்துறையும் வருகிறது. முதல் மனைவியின் குழந்தையுடன் வெளியில் செல்லும்போது பிரிந்துவிட்ட இரண்டாம் மனைவியைச் சந்திக்கிறான். அவளுள் இருக்கும் அன்பு அவனை நெகிழ வைக்கிறது. வீட்டைக் கலைத்துப் போட்டு சிரமப்படுத்தும் ஒரு சிறு கும்பலைச் சிலருடன் சேர்த்து பழிவாங்கும் ‘சிறுபிள்ளைத்தனமான’ நிகழ்வொன்று படத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் ஆன்மீக நாட்டம் நிம்மதியைத் தருமா என்ற அலைச்சல் இருக்கிறது. சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது தற்கொலை முயற்சிகளிலிருந்து தப்ப வைக்கிற உபாயமாக இருக்கிறது. ஆனாலும் குடும்ப வாழ்க்கையில் இல்லாத நிம்மதியை முதல் மனைவியின் குழந்தை, இரண்டாம் மனைவி என்று தேடிப்போய் கண்டு ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரின் படுக்கையறையில் இருக்கும் எரிக் காண்டோனா என்ற கால்பந்தாட்ட வீரரின் சுவரொட்டிப் படத்துடன் மானசீகமாக உரையாடிக் கொண்டிருப்பது அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கால்பந்தாட்ட வீரர் படத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து எரிக்குடன் தேனீர், மது அருந்துகிறார். ஆறுதல் சொல்கிறார். அவர் வீட்டைக் கலைத்துப் போட்டுச் சிரமமாக்கியவர்களைத் துவம்சம் செய்கிறார். சோர்வடையும் போதெல்லாம் அவரின் கூட இருக்கிறார். எரிக் காண்டோனாவை முன்வைத்துக் கால்பந்தாட்ட வரலாறும், சில பந்தயப் போட்டிகளின் காட்சிகளும் இடம் பெறுகின்றன. அவை படத்தினை இன்னொரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஒரு கால்பந்தாட்ட வீரர், பிரபலமானவர் என்ற வகையில் அவரின் ‘மாய’ இருப்பு அவருக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. அவர் எரிக்குடன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளினால் அவர் பெறும் ஆதர்சமும், ஆதரவும் அவரைப் பிரச்சினைகளிலிருந்து அவரை நகர்த்திச் செல்கறிது. இதை கென்லோச் நகைச்சுவையுடன் சொல்கிறார். ஒரு சாதாரண தபால்காரனின் அவஸ்தையூடே இந்த நகைச்சுவை வெளிப்படுகிறது. கால்பந்தாட்ட வீரர் எரிக் காண்டோனா ஓரிடத்தில் சொல்கிறார், ‘கால்பந்தாட்டப் போட்டியில் கோல் போடுவது பிரதானமல்ல. பந்தை சுமுகமாக நகர்த்திக் கொண்டு போவதுதான்’ தபால்காரர் எரிக்கிற்குக் கூட இதுதான் வாழ்க்கையின் சுமுகமானதன்மைக்கு மிக முக்கியம் என்று தோன்றுகிறது எனலாம்.