சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 13 ஜூன், 2010

அந்தமானில்……

அந்தமானில்……
================
சுப்ரபாரதிமணியன்
===================
அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன்.
அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அவர்கள் பற்றி கிடைக்கிற தகவல்கள் புகைப்படங்கள்,ஒளிப்படங்கள் ஆகியவை அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும்.
போர்ட்ப்ளேயரில் இருந்து பாராடன்ங் தீவிற்கு செல்லும் வழியில் ஜாரவா பழங்குடிகள் வழக்கமாக தென்படுவர். பாதுகாப்பாய் வாகனங்களில் செல்வோர் அவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும். சமீபத்தில் பாதையில் பல்வேறு இடங்களில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. யாத்ரீகர்கள் வீசியெரியும் உணவுப்பண்டங்கள் இனிப்புப்பண்டங்களை எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எண்ணிகை சற்றே அதிகரித்துதான் வருகிறது.
நவீன உணவுப்பொருட்களின் ருசி அவர்களுக்கு பிடித்துப்போயிருக்கலாம். வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் பான்பராக்,புகையிலை பொட்டலங்களையும் தூக்கியெரிகிறார்கள். இது போன்ற போதை வஸ்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தோன்றுகிறது. ஆதிவாசிகளளின் உடையமைப்பிலும், தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்கள் தென்படுகின்றன. பாதி நிர்வாணம், பாதி இலைஉடை என்ற வகையிலும் தென்படுகிறார்கள். சிறுவர்கள் டீசர்ட்,ஜீன்ஸ் ஆகியவற்றுடன் தென்படுகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளும், மருத்துவ உதவிகளும், உடை உதவிகளும் இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. கைகளில் வைத்திருக்கும் வில்அம்பு, கத்திகள் போன்றவற்றை வாகனங்களில் பறித்து பயமுறுத்தி உணவுப் பொருட்களை வாங்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவுத் தேவைக்கான அவர்களின் தேடல் வீதிகளில் வாகனங்கள் வரை வந்துவிட்டன.
எக்கோ-டூரிசம் என்ற சுற்றுலாபாணி சமீபத்தில் பிரபலமடைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மலைப்பிரதேசங்கள், அறியப்படாத பகுதிகளுக்கு செல்வதும், ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதும் இதனுள் அடங்கும்.
ஆதிவாசிகள் காட்சிப்பொருளாக மாற்றப்படுவதற்கான தந்திரங்களையும் இந்தபாணி சுற்றுலா கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் நவீன உணவு வகைகள்,யாத்ரீகர்களின் நவீன உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அவர்களின் உயிர்க்கு ஆபத்தாக முடிகின்றன. எக்கோ-டூரிசம் வணிகரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆதிவாசிகளை முக்கியமான காட்சிப்பொருளாக ஆக்கிவிட்டது.
பாரடங்கில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் வீதியோர நிலைமை ஈழத்தில் அகதி முகாம்களில் நிற்கும் ஈழத்தமிழர்களை ஞாபாகப்படுத்தியது.
அந்தமான் தமிழர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறது. பங்காளதேசின் அகதிகள் குடியேறி நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இலங்கை அகதிகள் இங்கு குடியேற்றப்படுவதில்லை. இலங்கை தமிழர்களும், ஜாரவாக்களைப் போல காட்சிப்பொருளாகிவிட்டார்கள்.