சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஜனவரி, 2011

கிடுகிடு கட்டிடங்கள்

2008ல் டாக்கா அதிர்வுக்குள்ளான நிலநடுக்கம் காரணமாக நிகழ்ந்த சேதத்தின்போது இன்னுமொரு அதிர்ச்சியான நிலநடுக்கம் டாக்காவில் நிகழுமானால் டாக்கா நகரத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிடும் என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் சொல்லிக் கொண்டிருந்தன. மோசமான கட்டிட அமைப்புகள் இதற்குக் காரணம். சிமெண்ட் பூசப்படாத செங்கற்கள் வைத்து கட்டப்பட்ட மூளிக்கட்டிடங்களைப் பார்க்கும் போது அவற்றின் உயரமும், விஸ்தாரணமும், அவை நிறுத்தப்பட்டிருக்கும் Ôபில்லர்Õ அமைப்புகளும் பயமுறுத்தவே செய்கின்றன.

திருப்பூரில் இருப்பது போன்று தனியான பனியன் தொழிற்சாலைக் கட்டிடங்களோ, தனிப்பகுதிகளோ இல்லாமல் டாக்காவின் பிரதான வீதிகளில் பலமாடிக் கட்டிடங்களில் சிலவற்றை பனியன் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்திருப்பது நகராட்சி பலமாடிக் கட்டிடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சின் சில மாடிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது போன்றதாகவே பனியன் தொழிற்சாலைகள் டாக்கா நகரில் தென்படுகின்றன. அவ்வப்போது உயரமான பனியன் தொழிற்சாலை செங்கல் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பனியன் தொழிலார்கள் காயமடைவதும் மரணமடைவதும் குறித்து அலோசியஸ் புள்ளி விபரங்கள் தந்தார். அதிர்ச்சிகரமான நிலநடுக்க அதிர்வாகத்தான் அது இருந்தது.










1858 முதல் 1930 வரை ஐந்து மிக முக்கியமான நிலநடுக்கங்களால் பங்களாதேஷ் நிலைகுலைந்திருக்கிறது. 1762இ 1934ல் மிகப்பிரம்மாண்டமான நிலநடுக்கங்கள் 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அப்போதெல்லாம் இந்தியாவிலும் பாதிப்புகள் அதிகம்தான்.

250 - 300 வருடங்களுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்று ஜப்பானிய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலர் 100 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்கின்றனர்.

வெள்ளம், புயல் காரணமாய் டாக்கா ஆண்டுகள் தோறும் பாதிக்கப்படுவதுண்டு, இதில் நிலநடுக்கம் தரும் அதிர்வும் அபாயகரமானதாக இருக்கிறது.

இந்தியாவில் 2001ல் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமான 2 லட்சம் பேர் இறந்தனர். சுனாமி 2004ல் 3 லட்சம் மக்களை பலி கொண்டது. காஷ்மீரில் 2005ல் நிகழ்ந்த நிலநடுக்கம் 80000 பேரை சாகடித்தது.








2010 செப்டம்பர் 10ல் நிகழ்ந்த நிலநடுக்கம் கூட டாக்காவை பெரிதும் பாதித்திருக்கிறது. நொடிகளில் தெருக்களின் பல கட்டிடங்கள் சாய்ந்து விட்டன. வீதியெங்கும் ஓலம். மக்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்து நெரிசலால் சாவுகள். முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீப்பிடித்து சில கட்டிடங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் நகராமல் நின்று விட்டன. சிதைந் கருகிய இடல்கள் ஆங்காங்கே தென்பட்டன. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினர் பெண்கள். வீதிகள் சிதிலமடைந்து தாறுமாறாய் இருந்தன. நகரம் சிதைந்தது என்கிறார் சேரில் கண்ட ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளில் நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலப்பரப்பு பகுதியை ஒட்டி நிறைய நிகழ்ந்துள்ளன. அது வங்கதேசத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை என்பதன் பாதிப்பு அது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹிமாலயன் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் வங்க தேசத்தைப் பாதித்திருக்கிறது. 1897ல் நிகழ்ந்த ஷில்லாங் நிலநடுக்கம் கிழக்கு வங்காளத்தை மிகவும் பாதித்தது. பிரம்மபுத்ரா நதியின் போக்கு திசை மாறியது. யாமுனா நதி புதுப்போக்கில் அமைந்தது.



சிட்டகாங், டாக்கா ஆகியவை நிலநடுக்க பாதிப்புப் பகுதிகளாகவே விஞ்ஞாளிகள் கருதுகிறார்கள். டாக்காவின் பெருநகர வளர்ச்சி சென்ற பத்தாண்டில் குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிட விதிகள் மீறப்படுகின்றன. தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் கட்டிடங்கள் வந்துள்ளன. ஏரிகள் குளங்களில் கட்டிடங்கள் கிளம்பியுள்ளன. அவையும் பலமாடி வீட்டுக் குடியிருப்புகளாகவும், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறியுள்ளன. பல பழைய கட்டிடங்கள் பராமரிக்கப்படுவதில்லை. பழைய அரசாங்கக கட்டிகங்கள் பராமரிப்பின் நிராகரிப்பில் உள்ளன. பழைய நகரத் தெருக்களின் குறுகிய பாதைகளும் நெரிசலும் நில அதிர்வை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 1.8 லட்சம் கட்டிடங்கள் சிட்டகாங்கில், 1 லட்சம் கட்டிடங்கள் டாக்காவில் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய அதிர்வு ஏற்படுமானால் டாக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அமு பகல் என்றால் முக்கால் லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்கா கட்டிடங்களால் விரிவடைந்துகொண்டே வருகிறது. பில்லர்களைக் கொண்ட அடிமட்டங்களால் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது முதலமைச்சர் கருணாநிதி ‘ஏய்யா... ஏன்ற நாற்காலியை புடுச்சு உலுக்கறீங்க’ என்றார். நாற்காலி பயம் எப்போதும் அவருக்கு. நாற்காலிகளில் சௌகரியமாக உட்கார வேண்டுமானால் நிலநடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை கொள்வது, அப்போது மட்டும் கலக்கமடைந்து தற்கால நிவாரணங்களைத் தேடுவது நல்லதல்ல என்கிறார்கள். இயற்கை மனிதனின் செயல்கள் மீது கோபம் கொண்ட விளைவு என்பது நம்பிக்கையாய் எல்லோர் மனதிலும் புதைந்து வருகிறது.

சுப்ரபாரதிமணியன்


pls vist

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3844