சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஒரு கவிதை & ஒரு நூல்

1.ஒரு கவிதை:

==========================

”பங்கரி’லிருந்து வந்த மனிதனை

வரவேற்றேன்.

தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன்

ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்.

அலுவலக நேரத்தில்

அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)

ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது

சாமான்யக் காரியமல்ல

( மெமொ-விளக்கம் தரவேண்டியிருக்கும்

அலுவலத்தண்ணீர்க் குழாயிலிருந்து

இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை

என்மேல் இன்னும் இருக்கிறது)

“பங்கரி”ல் கடவுளையும், சாத்தானையும்

சந்தித்ததாகச் சொன்னார்.

கடவுள் நீங்குகையில் சாத்தானும்

சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்

கற்பனை செய்து கேட்டேன்..

இருவரும் ஒரே நேரத்தில்

“ பங்கர்” குழிக்குள்

அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.

எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்த்து.

கடவுளும், சாத்தானும் “ பங்கரில் “ தூங்குவதில்லை என்பது

வருத்தமாக இருந்தது.

முடிகிறபோது வாருங்கள் என்றார்.

அவரின் அழைப்பு அபரிமிதமானதாகத் தோன்றியது.

ஆனாலும் தலையசைத்தேன்.

எனது அலுவலகப்பகுதியோ

எந்து வீடுள்ள பகுதியோ

நான் காலை நடை போகும் பகுதியோ

இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்.

சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது

வருத்தம் தருகிற விசயமாக இருந்தது.

கடவுளும், சாத்தானும்

என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி

அவ்வப்போது வந்து போகிறது.





2. ஒரு நூல்

” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல”

திரைப்படக்கட்டுரைகள் நூல்:

பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்

படாதக் குறும்படங்கள் குறித்துமான அவரது நுண்மையான பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.



(ரூ 60/= உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு )


செய்தி :
issundarakannan7@gmail.com