சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 7 பிப்ரவரி, 2011

” மண் புதிது “

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்

By சோ முத்து சரவணன்



பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு எழுதி வைப்பார்கள்.
சுப்ரபாரதிமணியன் தான் சந்தித்த வெளிநாட்டுமனிதர்களின் மனோபாவங்களையும், அவர்களோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். நாடறிந்த எழுத்தாளர் . அவர் இஅ எப்படி எழுதி இருந்தாலும் நண்பர்கள் வட்டம் பெருமைப்படுத்தவே செய்யும். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குறிய தார்மீகச் சிந்தனைகள் சிறிதும் பிறழ்வாமல் இவர் பதிவு செய்திருக்கும் குறிப்புகள் மிக மிக கனமானவை.
நான் இந்நூலை வாசிக்கும் போது எனக்கு இந்நூல் மறுபதிப்பு
வழியாக , 15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் வாசிக்க நேர்ந்ததை எண்ணி மிகவும் வருந்தினேன்.
மார்க்க்சியம் சார்ந்த சிந்தனையாளர் என்பதால் இதில் மனித உறவுகளின் மகத்துவம் பற்றி வெகுவாக உரசிப்பார்த்துள்ளார் இந்நூலினை 25 அத்தியாயங்களாக பிரிதுது எழுதியுள்ளார். இதை வாசிப்போர் தொடர்ச்சியாக இன்றி எந்தவொரு பகுதியை மட்டும் வசித்தாலும் அற்புதமாக பல விசயங்களைப் புரிந்து கொள்ளலாம். அய்ரோப்பா, இங்கிலாந்து பயண அனுபவம் இதில்.
புலம் பெயர்ந்த ஆசியர், இந்தியர், இலங்கைத்தமிழர் பற்றிய செய்திகளும் அவர்களது இன்னல்களையும் இங்கிலாந்துப் பெண்களின் வாழ்க்கை முறை , அதை இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை, ஜெர்மனி இணைப்பின் விளைவுகள், புதிய நாஜிக்கள் என்ற அடையாளத்துடன் சில புல்லுருவிகள் செய்யும் மூன்றாம் உலக நாட்டு மக்கள் மீதான் தாக்குதல், பிரான்சைக்கலக்கும் அல்ஜீரிய தீவிரவாதிகள் பற்றிய கலக்கம், அதே நேரம் அங்கே கடைபிடிக்கப்படும் ஜனநாயக மரபு, அதன் பிண்னனியில் உள்ள உண்மைகளை நிதர்சனமாக நம் கண் முன் கொண்டு வருகிறார்..
மூன்றாம் அலக நாடுகள் மீதான் முதல் இரண்டாம் உலக நாடுகளின் ஈவிரக்கமற்ற கரிசனம், தன் இயற்கை வளங்களை பாதுகாக்க மூன்றாம் நாடுகள் மீதான இந்த கரிசனப்பார்வையின் ஊளனத்தை 21ம் நூற்றாண்டின் 10 ஆண்டுகளிலேயே உலகம் அறிந்து கொண்டாலும் நூலாசிரியரின் பார்வையில் அது முன் கூட்டியே அலசப்படுகிறது. இது அவரின் எழுத்து சிந்தனைக்கு வளம் சேர்ப்பதாகும். அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்குள் எழும் பிரிவினை கோசங்களைப் பார்க்கைகையில் ஆசிரியர் பின் வரும் அத்தியாயத்தில் ஈழத்தின் மறுவாழ்வு பற்றிய ஆசிரியரின் கணிப்பு தவறாகிப்போனது.
மலையகத்தமிழனை, மட்டக்க்கிளப்பு தமிழன் மட்டம்காக நினைக்கும் நிலையில் இந்தப் பிரிவினை எண்ணம்தானே இன்று ஈழம் பற்றிய கனவு வீழக் காரணமானது. தமிழன் உலகம் முழுவது வாழ்கிறான் என்பது பெருமிதம், அதே வேளையில் பிரிந்தே வாழ்கிறான் என்ற செய்தி வேதனை தருகிறது.
நிற வெறி, இன வெறி என்பது சென்னை தூதரகத்திலேயே துவங்கி விட்டதை ஆசிரியர் குறிப்பிடும் போது இந்த உலகம் இன்னும் நாகரீகத்தின் எல்லையைத் தொடவில்லை என்பது உறுதிப்படுகிறது.
தஸ்லிமா நஸ் ரீன் பற்றிய பார்வை விலாசமானது மெக்டொனால்ட் உணவு பற்றிய ஆசிரியரின் பயம், நம் நாட்டின் தற்போது விற்பனையாகும் ஜங்புட் கலாச்சாரம் , தீம்பார்க், மாயாஜால் என்று மேலைக் கலாச்சாரத்தின் வேகம் ஜீரமாக பரவி வருவதை கண்கூடாக்க் காட்டுகிறது. அங்கு பார்த்த திரைப்படங்கள் பற்றிய பார்வை உலகை ஒரு சுற்று வர வைக்கிறது.
மனிதனுக்கான எல்லை எது என்பதில் மனிதம் மட்டுமே தோற்பதில்லை. வெகுவான மனிதர்களும் தோற்கிறார்கள் எல்லைகள் விரிவடைந்த போதிலும் மனித மனங்களின் விரசங்கள் விரிவடையக் தொடங்கியது. சமாதானத் த்த்துவம் மட்டுமே சகஜமானதாகப்பார்க்கப்படுகிறது. இதுவே உலக அரங்கில் அதிகார மையத்தின் அரசியல் சண்டையானது. இக்கட்டுரைதொகுப்பைப் படித்தபோது எனக்குள் எழுந்ததே இந்த விமர்சனத்தத்துவம் . இச்சிந்தையை தரும் இந்நூல் அதனளவில் வெற்றியே.
( சுப்ரபாரதிமணியனின் ” மண் புதிது “ பயணக்கட்டுரை.
அறிவு பதிப்பகம், சென்னை வெளியீடு
ரூ 60/ )

= சோ.முத்து சரவணன்