சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 1 மார்ச், 2011

அண்டை வீடு; பயண அனுபவம்

வங்கதேச அரசாங்கமே ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் என்று ’சேவ்’ அலோசியஸ் குறிப்பிட்டார். பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டாலும் வரி வசூலில் இருக்கும் சிரமங்களால் சரியாகப் பொதுவரி மூலமான வருமானம் கிடைப்பதில்லை. அரசுக்கும் சரியாக நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வங்கதேச அரசாங்கம் வெளிநாட்டு நிதி உதவியைப் பெரும்பாலும் எதிர்பார்த்து, வாங்கி அரசாங்கம் நடக்கிறது என்றார்.
40,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வங்கதேசத்தில் இயங்குகின்றன. வறுமையும், ஏழ்மையும் மிகுந்த நாடு என்பதால் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உலகநாடுகள் நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும், வங்கதேசத்திற்கு வருகிற நிதி ஆதாரங்களைப் போல இல்லை. ரஷ்யாவில் 3 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமீபமாய் இயங்குவதாய் சொல்லப்படுவதுண்டு.

குழந்தைத் தொழில் உழைப்பு, சுகாதாரத் திட்டங்கள், மரம் வளர்த்தல், பெண்களின் திருமணப் பாதுகாப்பு, மதுப்பழக்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், வரதட்சனைக் கொடுமைகள், தொழிலாளர் நலன்கள், முதியோர் பணிகள், பெண்களை ஒருங்கிணைக்கும் சுயநிதிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்காக நிதி ஆதாரங்களை வெளிநாடுகள் வழங்குகின்றன. இந்நாட்டின் மனிதர்களை "ஹ்யுமன் போன்சாய்" என்ற அடைமொழிகளுடன் அழைக்கிறார்கள்.

இஸ்லாம் அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக முன்னர் இருந்தனர். பெண்களுக்கான கல்வி, பெண்களின் முன்னேற்றம்,பெண்களை ஒருங்கிணைத்துக் கல்வி, பெண்களின் முன்னேற்றம், பெண்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்திற்கு முன் வைத்தல் போன்றவை இஸ்லாமிய விதிமுறைகளுக்கு முரணானவை என்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவ ஆதரவும் அவர்களை எரிச்சலூட்டியிருக்கிறது.

தற்சமயம் தன்னார்வக் குழுக்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கான ஆதரவாகவும், நிதி பெறுவதிலும், நிதி திரட்டுவதிலும் முன் நிற்கின்றன. இது அபாயகரமான போக்காகவும் கணிக்கப்படுகிறது. ரம்லான் போன்ற முஸ்லிம் பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்களை ஒருங்கிணைத்தல், பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கும் தன்னார்வக் குழுக்களின் நிதி உதவி பயன்படுகிறது.

இந்தியாவில் தன்னார்வக் குழுக்களின் நிதி ஆதாரங்கள் கல்விப் பணிக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்போது, வங்கதேச தன்னார்வக் குழு நிதி ஆதாரம் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. ஏழைகள் மலிந்த, ஜனப்பெருக்கம் அதிகம் கொண்ட நாட்டில் இயற்கை சீற்றம் மக்களை வெகுவாக அலைக்கழிக்கிறது. கடல்சார்ந்த நில அமைப்பும், வெள்ளப் பாதிப்பு விரைவில் ஏற்படும் வகையில் அது இருப்பதும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் வெள்ளத்தில் சுலபமாக முழ்கி விடுகிறது.

1998ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அரசு தத்தளித்தபோது தன்னார்வக் குழுக்கள் அந்த நிலையை சரியாகப் பயன்படுத்திப் பணிபுரிந்தன. 10 லட்சம் பேர் அப்போது வீடிழந்தனர். 3லட்சம் பேர் இடம்பெயர வேண்டியதானது. 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரெட் கிராஸ், கிறிஸ்டியன் எய்ட், வாங்குவிஷன் போன்ற உலக தன்னார்வ அமைப்பினர் அந்த சமயத்தில் பெரும் உதவி புரிந்தனர். தெற்கு ஆசியாவில் ஒரு டாலரை ஒரு தின வருமானமாகப் பெறுபவர் குறைவு. அதிலும் வங்கதேசத்தில் அரை டாலரை ஒரு நாள் வருமானமாகப் பெறுவோர் பாதி மக்கள் தொகை உள்ளனர்.இவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அரசும் நிர்க்கதியாகி விடுகிறது. வெள்ள அபாயக் காலங்களில் தன்னார்வக் குழுக்களின் பணி மெச்சத்தக்கதாக இருக்கிறது.
டாக்கா நகரின் வீதிகளில் தென்படும் BRAC பார்க் தன்னார்வக் குழுக்களின் அடுக்குமாடிக் கட்டிடங்களும் வணிக நிறுவனங்களும், அவர்கள் நடத்தும் வங்கிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன. ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் டாக்காவின் BRAC தன்னார்வக் குழு அமைப்பில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண்கள். 80% நிதி பெண்களின் சுயநிதிக் கொள்கைக்காகப் பயன்படுகிறது. பால், கோழி, துணி வகை தொழில்களுக்கு முதலீடாகியுள்ளது. 40,000 ஆரம்பப் பள்ளிகளை இவர்கள் நடத்துகிறார்கள்.

70,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகித்து சுகாதாரப் பணி செய்கிறார்கள். 5 வருடங்களுக்கு இலவசக் கல்வி தரும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள், 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற நூலகங்களும், பள்ளி நூலகங்களும் இவர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வங்கதேச விடுதலைக்குப்பின் 1972ல் பாஸிப் ஹுசேன் ஆபிட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், உகாண்டா போன்ற நாடுகளில் பெருமளவில் கிளைகளை வைத்து இயங்குகிறது.

வங்கதேசத்தின் வெற்றியடைந்த இன்னொரு தன்னார்வக்குழு " கிராமின் " என்பதாகும். முகமது யூனஸ் என்ற இந்த அமைப்பை நிறுவியவர் 2006ம் ஆண்டிற்கான் நோபல் பரிசு பெற்றபோது சிறு உதவிகளும், நுண்ணிய பொருளாதார உதவிகளும் செய்து சாதாரண மனிதர்களை மேம்படுத்துவதை உலகம் அறிய முடிந்தது. கிராமின் அமைப்பில் 80 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டிக் கடைக்காரர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்த சிறு கடன் உதவித் திட்டத்தை மாற்றுக் கோணத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் யூனஸ். கிராமப்புற மக்களும் , பிச்சைக்காரர்களும் கூட இதில் பயன்பெறுமாறு திட்டங்களை வகுத்து வெற்றிகண்டிருக்கிறார்.

மனித உரிமை விஷயங்களில் கிராமின் அக்கறை கொண்டது என்பதால் துணி உற்பத்தியில் அது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மலின உழைப்பு, சாயக் கழிவுக் கேடு உட்பட குறைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு புதிய திசையை வங்கதேசத்தில் காட்டியிருக்கிறது. 2009 நவம்பரில் ஜெர்மனின் நிறுவனத்தோடு இணைந்து இந்த மாற்றுத்திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

ஓட்டோ ஜரோப்பிய, வட அமெரிக்கா, ஆசியா நாடுகளில் 123 சில்லறை விற்பனை மற்றும் பொருளாதார சேவை நிலையங்களை நடத்தி வருகிறது. கிராமின் அமைப்புகளுடன் இணைந்து ஓட்டோ அமைப்பு ஜவுளித்துறையும், சமூக நடவடிக்கை நலன்களுமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. முன்னோடி தொழிற்சாலையாக டாக்காவில் அது அமைய, நிறுவனப் பணியில் இயங்குகிறது. கிராமின் ஓட்டோ அறக்கட்டளைகளுக்கு இதன் லாபம் செல்லும்.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு லாபம் செல்லாது. லாபம் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்தப் பயன்படும். லாபம் மீண்டும் தொழிற்சாலை உருவாக்கத்திற்கும், சுகாதார மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். முறையான எரிபொருள் சக்தி, சுத்தமான குடிநீரை ஏழைகளுக்கு வழங்க வகை செய்யும்.

முகமது யூனஸ் ஏழை மக்கள் தர்மத்தை எதிர்பார்ப்பதில்லை. ஏழ்மைக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இவ்வகையான தொழில் திட்டங்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்கிறார். கிராமின் ஓட்டோ ஜவுளித்துறை அனுபவங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயர்ந்த தொழிலாளர் நலன்களுடன் உற்பத்தி செய்கிறது. ஆரம்பத்தில் 1000 பேர் கொண்ட தொழிற்சாலையை டாக்காவில் ஆரம்பித்திருக்கிறது.

சரியான பொருளாதார தீர்வுக்கான சமூக நலன்களுடன் அது வங்கதேசத்தில் உற்பத்தியை துவக்கிச் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க இது போல் மாதிரி தொழிற்சாலைகளை நடத்த எண்ணி வருகிறது.

மாசுபட்ட தொழிற்சாலை கருத்தமைவுக்கு எதிரான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை இது தொடங்கியிருப்பது, பின்னலாடைத் துறையில் மோசமான முன்னுதாரணமாக விளங்கும் பல தொழிற்சாலைகளுக்கு முன் மாதிரியாக விளங்க ஆரம்பித்திருக்கிறது.

subrabharathi@gmail.com