சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 9 மார்ச், 2011

சாயத்திரைகள்


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

திருப்பூர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சாயப்பட்டறை பிரச்சினையை எப்படி வங்கதேசத்தினர் கையாள்கிறார்கள் என்று அறிவதில் ஆர்வமிகுந்தது. ஆனால் காசி போயும் பாவம் போகாத பாவனையில் அங்கும் சாயக்கழிவு பிரச்சினை தீவிரமாகவே இருந்தது.
திருப்பூர் நொய்யல் கரைகள் சாயப்பட்டறைகளின் கழிவுகளை வெளித்தள்ளும் இடமாக இருந்தது போல அங்கிருக்கும் நதிகளும் அப்படியே. நதிகளின் நாடு என்று அழைக்கப்பெறும் விதமாய் நிறைய நதிகள் உள்ள நாடு. வஙகத்தேசம். பூரிகங்கா, சித்திலக்கியா, தரக்பாலு ஆகிய மூன்று நதிகள் டாக்காவைச் சுற்றி ஓடுபவை. அவற்றின் கரையோர சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளை வெளித்தள்ளுபவையாக இருப்பவை. நகரின் வீட்டுக் கழிவுகள், 275 தோல் தொழிற்சாலைக்கழிவுகள், சணல் தயாரிப்புக் கழிவுகள் இவை சேர்ந்து டாக்கா நகரை அழுக்கு நகரமாக்கியிருக்கிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

கோல்டன் பைபர்” என்று அழைக்கப்படும் சணல் தொழில் இங்குள்ள முக்கியத் தொழிலாகும். இவை தரும் புற்றுநோய், பார்க்சைன் நோய்கள் மனிதர்களை முடக்கி விடுகின்றன. சுகாதாரக் கேடுகளால் ஆர்செனிக் கழிவு நீரை சுத்தமில்லாத தாக்கிவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் நியாய சாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். 25,000 குழந்தைகள் வருடந்தோறும் இவ்வகையான வியாதிகளால் இறக்கிறார்கள். 10 லட்சம் கிணறுகள் ஆர்செனிக் கழிவால் விஷமாகியிருக்கிறது. பதினோரு பேருக்கு ஒரு குழந்தை 5 வயது அடையும்முன்பே இறந்து விடுகிறது.


கோல்டன் பைபர்” சணல் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியா, சீனா, மியான்மர் நாடுகளில் வங்கதேசமும் முக்யமானது. வெள்ள அரிப்புக் காலங்களில் சணல் பைகள் பெரிதும் உதுவுகின்றன. பைகள், அலங்காரப் பொருட்கள், துணிகள் தயாரிப்பிற்கும் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இவற்றின் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பெருமளவில் தோல்வியடைந்துள்ளன.


யுனிவர்சல் நூல் டையிங் தொழிற்சாலை வங்கதேசத்தின் மிகவும் முக்யமானதாகும். இது டான்கெயில் என்ற நதிகள் கரையில் அமைந்து 75 மைல்களுக்கு சாயக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஏதுவாகி விட்டன. மீன்பிடித் தொழிலையும் பாதித்திருக்கிறது.


ஆர்வோ முறையிலான கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் முறையை சில சாயத் தொழிற்சாலைகளே கைக்கொள்கின்றன. சாயத்தால் மீன்கள் உற்பத்தி அழிகிற நிலையில், மனிதன் பிறந்து அல்லலுற்று சாக விதிக்கப்பட்டது போல் மனிதர்கள் அற்பஜீவியாக வாழ்கிறார்கள்.

பாலுக்குப் பதிலாய் ஆர்செனிக் கழிவுப்பாலைக் குழந்தைகள் சப்பிக் குடித்தபடி உயிர்துறக்கும் நதிகளின் நாட்டில் தரக்கட்டுப்பாடு பற்றின முறையான சட்டங்கள் வங்கதேச உயிர்களைக் காப்பாற்றும்.

ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா இப்போது பிரதமர். பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமி லீக் இடதுசாரிகளையும், மதச் சார்பற்றவர்களையும் கூட்டணி கொண்டது.

பங்களாதேஷ் தேசியக் கட்சி பிரதான கட்சி. இது இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும், சிறையும் சுலபமாக ஷேக் ஹசினா ஆட்சியில் கிடைத்து வருகிறது. சாயம் பற்றி சாதாரண சட்டங்கள் அமலாகி உள்ளன.


30லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் ரூ52தான்(டாக்கா). வெகு குறைவு. இரண்டு மாதம் முன் 15,000 பனியன் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் நடந்த சண்டையில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத் தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத் தலைவரைச் சந்தித்தோம். “5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பெனிகளையும் மூட வேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை” என்றார்.


திருப்பூரில் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், அரசின் கூட்டுக் கழிவு சுத்திகரிக்கும் நிலையங்களும் கட்டாயத் திட்டங்களும் பல சாயப்பட்டறைகளை மூட வைத்திருக்கிறது. பலவற்றை ஈரோடு மாவட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போய்விட்டது. சாயப்பட்டறைகளை நடத்த முடியாத சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆர்வோ முறைத் திட்டங்களும், சுத்திகரிப்பு நிலையங்களும் இல்லாத தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையை வங்கதேசத்தின் ஏற்றுமதியாளர்களிடம் திருப்பூர் தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை மணியாக ஒலித்தனர். இந்த எச்சரிக்கை மணி 25 ஆண்டுகளாக திருப்பூரில் ஒலித்துக் கொண்டிருந்தது கவனத்திற்குரியது.


உலகவங்கி தந்திருக்கும் ஒரு அறிக்கைபடி வங்கதேசத்தில் 1.5 மில்லியன் கியுபிக் மீட்டர் அளவு கழிவு நீர் 7000 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 0.5 மில்லியன் கியூபிக் மீட்டர் பிற வகைகளில் சேரும் கழிவு நீராகும். டாக்காவின் ஓரப்பகுதியிலான பூரிகங்கா நதி பல ஆண்டுகளாக கழிவுகளின் ஓடையாகிவிட்டது. சுற்றிலும் உள்ள மக்களும், நதி ஓடும் கிராம மக்களுக்கும் நச்சுக் கழிவைப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது.

யுனஸ்கோ 2010ம் ஆண்டை சர்வதேச ப்யோடைவர்சிட்டி ஆண்டாக அறிவித்திருக்கிறது. இரண்டு மாதங்கள் முன்பு வங்கதேச அரசு சுற்றுச்சூழல் நீதி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நல்ல விடயம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறையும் அல்லது 5லட்சம் டாக்கா அபராத்த் தொகை என்று விதிக்கப்பட்டிருக்கிறது அந்தச் சட்டத்தில். இதன்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதில் வழக்கைத் தொடரலாம். மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் வங்கதேசத்தில் இச்சட்டம் ஒரு பயமுறுத்தலாகவே அமைந்துள்ளது. மொபைல் நீதிமன்றங்களை மாவட்டங்களிலும், தலைமையிடமாக டாக்காவிலும் நியமித்திருக்கிறது. பங்களாதேஷ் ரப்பர் பாலிசி 2010 என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. ரப்பர் பயிரிடுதல் என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அதன் தவறான நடவடிக்கைகளும் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாசுபடுத்துபவர்களுக்கு 5 லட்சம் டாக்கா தொகை பெரிதல்ல என்பதும் தெரிகிறது. பிரதமர் இரண்டு விடயங்களை நிராகரித்திருக்கிறார் என்பது ஆறுதலானது:

மதாரிப்பூர் மாவட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதை அழிப்பது, எல்லையோர மாவட்டங்களில் இந்திய யானைகள் வந்து பயிர்களை நாசமாக்குவதைத் தடுக்க அவற்றைக் கொல்வது.


எதிர்காலத்தில் காட்டுப்பயிர் பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் பற்றி இந்த நிராகரிப்பு யோசிக்க வைக்கிறது. திருப்பூர் சாயப்பட்டறைகள் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி அவ்வப்போது மூடப்படும் செய்திகளை சுற்றுச்சூழல் பிரச்சாரமாக தொழிற்சங்கத் தலைவர்கள் டாக்காவில் சில தரச்சான்று தணிக்கையாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.