சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 6 ஏப்ரல், 2011

பருத்திக்காடு” – நூல் வெளியீடு

திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது.



சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர்



ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர்



சங்கத் தலைவர் சொக்கலிங்கம், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர்



ஜீவானந்தம், வழக்கறிஞர் மோகன், டாப்லைட் வேலு, ஆகியோர் பிரதிகளைப்



பெற்றுக் கொண்டனர்.


வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்..


எழுத்தாளர்கள்



மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், காரை. சந்திரசேகர்,



ஆசீர்வாதம் மற்றும் புத்தக கண்காட்சி அமைப்பாளர் கே.ஆர். ஈஸ்வரன்,



கலைவாணி சோமு, ராம மூர்த்தி, நிஷார் அகமது பழ.விஸ்வநாதன் உட்பட



பலர் முன்னணி வகித்தனர். பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்








பருத்திக்காடு- திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2010 : பங்கு பெற்ற


படைப்பாளிகள்:


சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/ சுந்தர் அனர்வா/


மகுடேஸ்வரன்/ ஆதலையூர் சூரியகுமார்/



குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/ ஆர்.பி.ராஜநாயகம்/



காரை சந்திரசேகரன்/ தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/



கிரிஜா சுப்ரமணியம்/ ஆலம்/ காயாதவன்./ ஆர்.ஆர். பாலகிருஷ்ணன்/


ரவி மகேஷ்/ ஆசிர்வாதம்/ திருப்பூர் டி.குமார்/ டாக்டர் செலவராஜ்/


நாகேஷ்வரன்/ டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா/ சிவக்குமார் பிரபு/


நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/


ஆர்.காளியப்பன். விலை ரூ 70/




பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
















” கனவு” இலக்கிய கூட்டம்





“கனவு” இலக்கிய வட்ட மார்ச் கூட்டம் ஓஷோபவனில்


நடைபெற்றது. வழக்கறிஞர் சுகன்யா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்


செல்வராஜ் முன்னிலை வகித்தார். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான ” பருத்திக்காடு” ( வெளியீடு: கனவு


பதிப்பகம், திருப்பூர், பக்கங்கள் 144, விலை ரூ.70) நூலை அறிமுகப்படுத்தி


பேசினார். நாவலாசிரியர் தி. குழந்தைவேலு “ தந்திர கவசம்” என்ற


அவருடைய புதிய நாவலின் அனுபவங்களை விளக்கினார். சிவதாசன்


“ தென் கொங்கு” என்ற உடுமலை ‘துரை அங்குசாமி’ எழுதிய நூலை


அறிமுகப்படுத்தினார். வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர்கள் ரத்தினமூர்த்தி , ஜோதி,


ஆகியோர் இன்றைய திருப்பூர் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


பற்றி பேசினார்.



செய்தி: சி.ரவி


வழக்கறிஞர்.