சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 29 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்,

பலவீனமான பெண் குரல்கள்
--------------------------------









டாக்கா நகரின் நெரிசலான பகுதியொன்றில் நஜ்மா அகதர் என்ற பெண் தொழிற்சங்கத் தலைவரைத் திருப்பூரிலிருந்து சென்ற எங்கள் குழு சந்திக்கச் சென்றபோது அவர் எங்கள் குழுவில் பெண் பிரதிநிதி யாரும் இல்லாததைக் கண்டு, அதைக் காரணம் சொல்லி சந்தித்துப் பேச மறுத்தார். " இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. இதிலிருந்து வருபவர்களில் பெண் பிரதிநிதி ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தமே" எங்கள் குழுவில் தொழிற்சங்கத் தலைவர்கள், தன்னார்வக் தொண்டு அமைப்புக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என்று 12 பேர் ஆண்கள் இருந்தோம். வங்கதேசத்தின் பின்னலாடை வளர்ச்சியின் அபரிதமான தன்மையைக் கண்டு கொள்ளச் சென்றிருந்தோம்.

டாக்காவில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள். விதேசி தொழிற்சாலைகள் என்பவற்றில் 5% தொழிலாளர்களே உள்ளனர். பங்களாதேஷ் பேக்டரிகள் எனப்படுபவை உள்ளூர் தொழிலாளர்களை மையமாக்க் கொண்டவை. இவற்றில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்குச் செல்கிறது. இங்கிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கும் 57% சதவீதம் உற்பத்தி நடக்கிறது. வால்மார்ட், டெக்கோ, ஹெச் அண்ட் எம் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்து வருகிறார்கள். கொரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். 120 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 55 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண் பின்னலாடைத் தொழிலாளர்கள்.



24 தொழிலாளர் கூட்டமைப்புகள் இருந்தாலும் நேரடியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறைவாகவே இருக்கிறார்கள். மொத்தத் தொழிலாளர்களில் 3.5% மட்டும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கை என்று வரும்போது பொய்யான வழக்குகள், தண்டனைகள் சுலபமாக கிடைத்து விடுகின்றன. BJPJ, BMJF, JSF போன்ற தொழிற்சங்கங்கள் அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. BTUK என்ற பொதுவுடைமைக் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் இருந்தாலும் வலுவானதாக இல்லை. ஆளும் அலாமிலீக் கட்சியின் தொழிற்சங்கம் அரசுக்கு ஆதரவானத் திட்டங்களை முன் வைத்துப் பிரசாரம் செய்கிறது.









விவசாயத்தை முன்னணியாகக் கொண்ட நாடு என்பதால் தொழிற்சங்கத் தலைவர்கள் மிகவும் படித்தவர்களாக இல்லை. பொருளாதார நிலைகளில் பின்தங்கிய சமூகங்களிலிருந்து அந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக வரும் வாய்ப்புகள் அரசியல் பலமுடையவர்கள் மத்தியில் தோற்றுப் போகிறது.

நேர்மையான தியாக உணர்வு மிக்க தொழிற்சங்கவாதிகள் குறைவாக இருப்பதும், பெண் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தும் முஸ்லிம் சட்டங்கள் இல்லாததால் பலவீனமாகவே உள்ளது. தற்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொழிற்சங்கங்களிலும், அமைப்புகளிலும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள். ஆதிக்க மனப்பான்மை பெண்களை ஒதுக்கி விட்டிருக்கிறது. பெண்களுக்கான பிரத்யேக பிரச்சனைகளை முன் வைப்பது வெகு குறைவாக இருக்கிறது. 112 நாள் பிரசவ விடுமுறை தருகிறோம். மாதவிலக்கு சமயங்களில் கேர்ப்ரீ உள்ளாடை இலவசமாகத் தருகிறோம். பெண்களுக் கென்று தனியான தொழுகை செய்ய இடங்கள் உள்ளன என்று நெதர்லாந்து நாட்டிற்கு உற்பத்தி செய்து அனுப்பும் ஒரு பின்னலாடைத் தொழிற்சாலையினர் தெரிவித்தார்கள். பெண்களின் உரிமை குறித்த விழிப்புணர்வும், சமதன்மையும் குறைவாக இருப்பது பெண்களை வெறும் தொழிலாளர் நிலையிலேயே வைத்திருக்கிறது. பெண்களுக்கான சம்பளம் குறைவே என்பதால் இந்தியாவிற்குச் சென்று பணிபுரியும் 80 லட்சம் பெண்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது.

பின்னலாடை மற்றும், தேயிலைத் தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலைக்கு நியமிப்பது சாதாரணமாக உள்ளது. திருப்பூரின் சுமங்கலி திட்டம் போன்றவை இங்கு உள்ளதா என்று சந்தேகம் கொள்ளும் அளவில் இளம்பெண்களே பின்னலாடை தொழிற் சாலைகளில் காணப்பட்டனர். திருப்பூரில் அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 180ரூ, முன் அட்வான்சுத் தொகை, பல தொழிற்சாலைகளில் தங்குமிடங்கள், பக்கமிருக்கும் கிராமங்களிலிருந்து தொழிலாளர்களைக் கூட்டி வர பேருந்து வசதி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும்போது வங்கதேசப் பெண்கள் நிலை பரிதாபகரமானது. இளம் பெண் களுக்கான தங்குமிடங்கள் பிரச்சினையாகின்றன. சரியான குடியிருப்புகள் இளம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

பஜ்ரானாசிபா என்ற இளம் பெண், 28 வயது. டாக்கா பின்னலாடைத் தொழிலுக்கு வந்தவள் தங்க இடம் தேடி 30 வீடுகளுக்குச் சென்றபின் அய்ந்து பேர் தங்கும் ஓர் அறையில் கடைசியில் இடம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் வீடு வாடகைக்குக் கொடுப்பவர்கள் இளம் பெண்களுக்கு வீடு தருவதில்லையாம். அதிக வாடகை. தங்கும் விடுதிகளின் தரம் மோசமாகவே இருக்கிறது.








" தனியே நான் தங்கியிருந்தபோது சிறுவர்கள் கற்களால் எங்களைத் தாக்கியிருக் கிறார்கள். வீதியில் நடக்கையில் கேலியும் கிண்டலும் சாதாரணம். வேலை முடிந்து நடு இரவில் இருட்டு அறையில் போய் முடங்கும் வரை எங்கள் உயிரும் உடம்பும் எங்களுடையதாக இருக்காது. இன்றைய பிரதமர் பெண்ணாக இருக்கலாம். மாறிமாறி பெண் பிரதமர்கள்தான் வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்திலுள்ள பெண்கள்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும் இங்கு. எங்கும். " என்றார்.பெண் சக்தியின் வடிவமானவள்தான். ஆனால் தொழிற்சாலை அமைப்புகளால் சக்கையாக்கப்பட்டவளும் கூட என்பதை வங்கதேசப் பெண்களும் உணர்த்தினார்கள்.