சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 20 மார்ச், 2013



ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்

                                             சுப்ரபாரதிமணியன்

--------------------------------------------------------------------------------



வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல்  சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கனவுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.
    சுப்பையா, சரவணனின் வீடு பற்றிய கனவுகள்,  ரேணுவின் இரண்டாம் திருமணமாவது சுமூகவாழ்க்கையாக  இருக்கவேண்டிய கனவுகள்,  சரவணன் பத்மாவின் சாதாரண லவுகிய வாழ்க்கைக் கனவுகளைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.குழந்தைகளின் உலகம் பற்றி அவரின் சிந்தனை தொடர்ந்து ஜெயந்தியின் படைப்புகளில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறன. அர்ச்சனாவின் இயல்பான உலகமும், நவீனின் உளவியல் ரீதியான முரண்பட்ட உலகமும்  எதிமறை அனுபவங்கள்  கொண்டவை. சரவணன் பத்மா,  ரவி ரேணு வின் உலகங்களும் மறு பதிப்பானவை.  சகமாணவன் ஸிஹாவ்வின் சேஸ்டைகளின் உலகமும், ரவியின் மனப்பிறழ்வு நடவடிக்கைகளால் அவனது மகன் நவீனின் எதிர் விளைவுகளும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.குழந்தைகளின் உலகம்  போலவே முதியவர்களின் உலகத்தையும் நுணுக்கமாகக் காட்டுகிறார்.பருத்த உடம்பு கொண்ட அமாட்டின் நடத்தைகள், லீவிங்கீன் மரணம் அதுவும் கொலையில், சுப்பையாவின் சக்கர நாற்காலி வாழ்க்கை என்பதாய் விரிந்து கொண்டே இருக்கிறது. வயதானவர்களின் உலகமும் இந்த இளைய தலைமுறையினருடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கோவிலுக்குள் வாக்க்கிங் போவதும், பழனி திருவண்ணாமலை என்று  புனித யாத்திரை போவதும் பிடித்திருக்கிறது.ஒரு வகையில் இந்த வித்தியாச உலகத்தைக் காட்ட இவை உப்யோகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் நகரின் வளர்ச்சியோடே இவர்களின் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.முருகன் கோவில் கட்டப்படுதல், விரிவாக்கத்தில் சிதைபடுகிற இடங்கள், வெள்ள காலம், செம்பவாங் சாலை வளர்ச்சி என்று தொடர்கிறது.எலந்த மரம் பாலசுப்ரமணியர் பின்னர் புனித மரம் பாலசுப்ரமணியன் என்று பெயர் மாறி வெள்ளைக்காரனின் பெருந்தன்மையும் காட்டப்படுகிறது.

காலம் மெல்லிய நதியாய் நாவல் முழுவது ஒடிக்கொண்டிருகிறது. இந்திராகாந்தி சுடப்பட்ட பள்ளி காலம்.., யிசின் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விசேசம், முருகனைத்துரத்திவிட்டு   தண்டவாளம் போடும் ஆர்ச்ச்ர்ட் எமார் டிக்க்காலம், தூன்மேரா தில் வேலியா படம் திரையிடல் காலம் என்று நுணுக்கமானக் குறிப்புகளால் நாவலின் காலம் கதையில் கால் பதியாத மனிதனின் ஓட்டம் போல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.இவை பற்றியக் குறிப்புகள்  நாவலினை காலம்  சார்ந்து நகர்த்திக் கொண்டே இருப்பது முக்கிய அம்சம்.
.
ரவியின் நடத்தையில் இருக்கும் மனப்பிறழ்வு அம்சங்கள் குடும்பத்தை திடுக்கிடச் செய்கின்றன. அதற்கான காரணங்கள் சரியாக முன் வைக்கப்பட்டிருகிறது.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் என்று மாறி மாறி தமிழ்க்குடும்பங்களின் வாழ்க்கை பத்மா, ரேணுகா குடுமபங்கள் மட்டுமின்றி கவிதா, ரேவதி, தர்ஷினி, மீனா குடுமபங்களின் வாழ்க்கை முறையாலும் நீள்கிறது.எல்லா மனிதனும் தான் அணைத்துக் கொள்ள நீளும் இடங்களிலெல்லாம் அகப்படுபவர்களைச் சேர்த்துக் கொள்வது போல் இந்த கதாபாத்திரங்கள் வந்து சேர்கின்றன.இந்திய வாழ்க்கை சென்னை என்று மட்டுமில்லாமல் பூனா, பம்பாய், தில்லி என்று காட்டப்பட்டிருக்கிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு கலாச்சார நிலைகளையும், மொழி சார்ந்த நிகழ்வுகளையும் முறையாக எடுத்தியம்ப இந்த்  விரிவாக்கம் உதவுகிறது. ஆனால் அரசியல் ரீதியான முனைப்புகளோ அரசியல்நிகழ்வுச் சிதறல்களோ இல்லாமல் இருப்பது தமிழ் சமூகம் அரசியலை புறம் தள்ளி விட்டு வாழ்வைக் கட்டமைப்பது வருத்தமே தருகிறது
      இதில் வரும் சீன மனிதர்களும் வாழ்க்கையும் ஜெயந்தியின் சீனப் படைப்புகளின் மீதான அக்கறையும் சீன மொழிபெயர்ப்புப் பணிகளையும் நினைவூட்டுகிறது..சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்கள், சீனக்கோவிலக்ள், சீனர்கள் குணநலன்கள் என்று  சில முக்க்கியப் பதிவுகளையும் இந்நாவலில் கட்டமைத்திருக்கிறார்.
                                               ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சயம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றை கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல  பாலியல் உவ்வே சமாச்சாரங்களை  மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து  வரும்   அவரின் மொழிபெயர்ப்பு  உட்பட   நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம்  சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார்அவரின் வாழும் புத்தர்  “  என்ற  சமீபத்திய  மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது            “  நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும்  முக்கிய நம்பிக்கை வைக்கவும்  மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள்  அவனை வணங்கும் போது தானும் தெய்வம்தான் என்றே  எண்ணத்தலைபடுகிறான்தெய்வமாக நடந்து கொள்ளவும்  ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனினை நம்பவும் பைத்தியமாக வழிபடவும்  ஆரம்பிக்கலாம். மக்களுக்குக் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயினஅவ்வருடங்கள்  அபத்தங்கள்  நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.

அபத்த உலகம் தான். அபத்த நிகழ்வுகள்தான்.    இந்த அபத்த்த் தன்மை நவீன் மிகு வேக வாழ்க்கையில் விரவி விட்டது. “ போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட வாழ்வில் நிலப்பரபுகளின் எல்லைகள் கலந்து மங்கி மறந்து விட்டதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனியொரு  திணையாகித் திரிவதை உணர்ந்து “ அதை இலக்கியப் படிவமாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். மனப்பிரிகை, குவியம் போன்ற  முந்தின நாவல்களில் கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வடிவச் சிதைவு,  பாகங்களின் நிரப்புதலில் டைரிக்குறிப்புகள், குறுஞ்செய்திக்குறிப்புகள், கடிதங்கள் பாணி இதிலில்லாமல்      நேர்கோட்டுப்பாணி கதை கூறலில் இந்திய சமூகம், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினரின்  வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் சுவையாகக் கட்டமைகப்பட்டிருக்கிறது. இந்நாவலில்  

  ( ரூ 175, சந்தியா பதிப்பகம், சென்னை )


தமிழ்மகனுக்கு இன்னுமொரு விருது


    நீலகிரி மலையைச்  சார்ந்த மலைச்சொல் என்ற இலக்கிய  அமைப்பு  இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய  நாவலான “ வனசாட்சிக்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.  எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர்.  ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும்..
   தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை  முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட  ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து  வேரோடு பிய்த்துக் கொண்டு  இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார்  என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.


இலஙகை  மலையகத்தமிழர்களின் வாழ்க்கையூடே வெவ்வேறு தளங்களில்  அதிகாரங்கள் குவியும் வாய்ப்பு ஏற்படும் போது  மனித வேதனையின் விளைவு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. .             இந்த நாவலின் மூன்று பாகங்களாக அமைத்திருக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன்  வேலூர் மாவட்டத் தமிழர்கள் சிலர் இலங்கைக்கு  தேயிலைத் தோட்டப்பணிக்காக  செல்லுவது. முதல் பாகமாகியிருக்கிறது. இரண்டாம் பாகம் சிறிமாவோபண்டாரநாயகா சாஸ்திரி ஒப்பந்த்தின்படி மலையக வாழ் தமிழர்கள் சிலர் தமிழகம் திரும்புவது  என்று அமைந்துள்ளது. மூன்றாம் பாகம் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு கல்லூரி ஆசிரியர் ஒருவர் தன் அத்தையைத் தேடிஇலங்கைக்குச் செல்வது, திரும்புவது என்றமைந்திருக்கிறது.  வன்னியுத்தம் பற்றிய  பதிவாகவும் இப்பகுதி  அமைந்துள்ளது. 
இவ்வாண்டு சர்வதேச தேனீர் ஆண்டு . சமீப ஆண்டுகளில் வெளியான  எரியும் பனிக்காடு மொழிபெயர்ப்பு நாவல் முதல் அன்வர் பாலசிங்கத்தின்  செந்நீர் நாவல் வரை இவ்வாண்டை நினைவு கூறுகின்றன.   இந்நாவலும்  கூட...அதிகாரத்தினை கேள்விக்குறியதாக்கி, கட்டுடைக்கிறது இதன் மையம். இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

                 - சுப்ரபாரதிமணியன்




புத்தகம் பேசுது : பசுமை இலக்கியம் :
=================================================================================================
புத்தகம்  பேசுது  மாத  இதழ்  சென்ற மாதம் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அது பற்றீ:
பசுமை இலக்கியம் பற்றிய இதழில் சில எழுத்தாளர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. திருப்பூர் சுப்ரபாரதி மணியனின்  “ சாயத்திரை  நாவலில்    நொய்யல் நதி ஒரு கதாபாத்திரம் போலவே அதன் உருவகம், தொன்மக்கதைகள், அதன் கரையில் முன்புன்  பின்பும் மக்களின் வாழ்க்கை என்ற சித்திரம் பின்நவீனத்துவ வடிவில் அமைக்கப்பட்டு, சாயம் திருப்பூர் மக்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்திருப்பதை கோடிடுவதில் அது சுற்றுச்சூழல் நாவல் என்றே அறியப்பட்டு ஆங்கிலம், கன்னடம், வங்காளம், மலையாளம், ஹிந்தி,  என் பல்வேறு மொழிகளீல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அவரின் எழுத்துச் செயல்பாட்டிலும், சுற்றுசுழல் நோக்க செயல்பாடுகளிலும் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்..30க்கும் மேற்பட்ட சுற்றுசூழல் கட்டுரைகள் எழுதியுள்ளார், அதில் ஒரு பகுதி “ தண்ணீர் யுத்தம் ‘ நூல் எனலாம். அவரின் சென்றாண்டு வந்த        நீர்த்துளி  நாவலில்  சாயப்பட்டறைகள் மூடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பின்புலத்தில் நிகழும் பொருளாதார சமூக சிக்கல்களை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன் வைத்தே பேசப்படுகிறது. நீர்த்துளி “ நாவல் இப்படி ஒரு விவசாயின் பார்வையோடு  முடிகிறது: “ இனி ஒரு சொட்டு சாயம் கூட நொய்யலில் விழக்கூடாது
சென்றாண்டு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு நாள் சிறப்புரையில் தியோடர் பாஸ்கரன்  பேசும் போது ஒரு புராணக்கதை, சா.கந்தசாமியின் சாயாவனம் நாவல், மா.கிருஸ்ணன் கட்டுரைகள், தேவதச்சனின் சில கவிதைகள் என்று சுற்றுச்சூழல் படைப்புகள் என்று பேசினார். நல்லவேளை உங்கள் இதழ் அதற்கு பிராயச்சித்தம் செயவது போல் சிலரை அடையாளம் காட்டியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சாயாவனம் சுற்றுச்சூழல் நாவல் ஆகிற போது சமகாலப்பிரச்சினையைப் பேசும் சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை”,   ஜெயமோகனின்       “ காடு “  ஆகிய நாவல்கள் சுற்றுச்சூழல் நாவல்கள் ஆகாதா.. கோவையைச் சார்ந்த சி.ஆர். ரவீந்திரனின்         “ மணியபேராநாவலில்  இயற்கைக்கு எதிரான மனிதர்களின் நுழைவும் ஆக்கிரமிப்பும் , ஆட்டனத்தின்
“ வனம்நாவலின் அம்சங்களையும் இந்த நேரத்தில் யோசிக்கலாம். கோவை ஓசை அமைப்பின்  செயல்பாடுகளும், காளிதாஸ்., அவைநாயகத்தின் படைப்புகளும் ஓசையின்  சிறு வெளியீடுகளும் கவனத்திற்குறியவை. திருப்பூர் மக்கள் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி அக்கறை கொள்ளும் ஒரு முக்கிய அமைப்பு.அது வெளியிட்டிருக்கும்  படைப்புகள் பட்டியலையும் கவனத்தில் கொள்ளலாம்.அதன் செயல்பாட்டில்  நொய்யல்  சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு, இழந்த வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சிகள் என்பவை இந்த இலக்கியப்  படைப்புகளின் நிதர்சன செயல்பாடுகள் என்பது மிகவும் முக்கியம்  இது போல் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட பிற படைப்புகளையும் பிற வாசகர்கள் கோடிட்டுக் காட்டலாம். அந்தந்த எழுத்தாளர்களுக்கு நியாயம் செய்வதாக அது இருக்கும். ஒருதலைபட்சமான இலக்கிய அரசியலைத் தவிர்க்க உதவும். அதற்கு

=  சாமக்கோடாங்கி ரவி   திருப்பூர்,(  வழக்கறிஞர் சி.ரவி, 94 எம்ஜி புதூர் 3 வது வீதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  எதிரில், திருப்பூர் 641 604)