சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

சுப்ரபாரதிமணியன்


யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது.
சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் இல்லாமல் போய் விடுகிறது. சிறுபத்திரிக்கைப்பணியில் ஆரம்பித்தது பெரும் பத்திரிக்கைப் பணியாகி விட்டது. கவிதையைக் கைவிடுவது சற்றே சிரமமானது. அடைமொழியை சுலபமாக கை விட்டு விடமுடியாது. அதனால் கவிதை  உடனான உறவை தவிர்க்க இயலாமல் வைத்துக் கொண்டே இருக்கிறார். அது இத்தொகுப்பில் தொடர்கிறது.கிணற்று பாறையிடுக்கில் கசியும் நீராய் இருந்து கொண்டே இருக்கிறது.

காலை நடைபாதை பயணம் பலருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறது. புன்னகையை உதிர்க்க வைக்கிறது.  பலமுகங்களை அறிமுகப்படுத்துகிறது.   பழைய முகங்களுடன் பரிச்சயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கச் செய்கிறது.  அதையே கவிதையிலும் செய்யச் செய்கிறது.
நகரம் பற்றி அதிகம் பிரஸ்தாபித்துக் கொண்டே இருக்கிறவர் அமிர்தம் சூரியா.            நகரப் பட்சிகளின் காலையை விவரிப்பவர் ( 140 )புலியாய் நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் பயம் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.(5 ) மனிதன் யார் என்று சகமனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் . கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்க இயலவில்லை என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் ( 42 ) நகரங்களை விட்டு ஓடிப் போகிற பாதத் தடங்களைப் பற்றியும் பேசுகிறார். பூட்டிய கிராம வீட்டின் கொல்லைப்புற டிரங் பெட்டியைத் தேடும் ஆசையும் இருக்கிறது.நகரம் அவரை பயமுறுத்துவதை அவரின் சிறுகதைகளிலும் காணலாம். இந்தக்  கண்டடைதலுக்குக் காரணமாக வாழ்வைத் துழாவுதல் இக்கவிதைகளில் இருக்கிறது. சுருக்குப் பையில் – கடைசி ஒற்றைக் கொட்டைப் – பாக்கைத் தேடும்- பாட்டியின் விரல்களைப் போல்(28) . தருக்கத்தை மீறி சொல்லவும் இவருக்கு நிறையவே இருக்கிறது.மாயையின் பல அடவுகள் இவருக்கு விசித்திரம் காட்டுவதைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

கவிதை பற்றிய இவரின் முன் மொழிதல்களைக்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  மானுட மன இருளறையில் தேங்கிக் கிடக்கிறது குளமாய் / இறைத்தேன் வீதியில் பிசுபிசுத்த்து விரலில் வரியின் காயம் ./புன்னகையினுடே தெறித்தது பரண் இடிக்கும் சூட்சுமத்தின் பிம்பமும் அதனூடாக கூட்டமும் கூவலும் மாய தரிசனமாய்/ நமக்குத் தெரியாமல் நமக்குள் பசித்த காகமும் வெடித்த மதிலும்- விதைக்குப் பதிலாய்- முளைக்கத் தெரிந்த முற்றிய  வார்த்தைகள் / இயக்கும்-இயங்கும் வாழ்வை- மனதின் கதியில் காற்று- காற்றுமாதேவி தரிசனம் தொடர்கிறது யாதுமாகி.

    மரணம்  மாயையா. இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையில் தள்ளாடுகிறது இந்த மாயைத்தனம். மாயை குறித்து பேசும்  நிர்பந்தம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை ஒப்புக்கொண்டு  வாழ்வை நிஜமாகவேக் கொண்டு நகர்ந்து  விடுவதை இக்கவிதைகள்  கோடிடுகின்றன.
 பூனை குறித்துச் சொல்லப்படுகிறதில் பூனைதான் என்று சொல்லப்படுவதில்லை. மனிதர்களின் தேவைகளைக் குறியீடாக்கிக் கொண்டே போவது போல் பல குறீடுகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறியீடுகள் மூலமான சுய விசாரணை இக்கவிதைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தேவதேவனுக்கு அருகாமையில் இவர் இருப்பதாய் ஜெய மோகன் சொல்கிறார்.  ஆனால் இயல்பு ஒழுங்காய் இக்கவிதைகள் செல்லாமல் தடைபடுவது அதற்கு எதிராக இருக்கிறது. வடமொழிச் சொற்களின் மீதான காமமும், தலைப்பிடப்படுவதில் இருக்கும் வலிந்த தன்மையும் தேவதேவனிடம் இருக்காது. உரையாடல்களுக்கான நிறைய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இக்கவிதைகளில் பல  உரையாடல் தளத்திலேயே  கட்டமைக்கப்பட்டிருப்பது வாசகனுடனான உரையாடலை எளிமைப்படுத்தியிருக்கிறது.
  ( ரூ 100 , அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )