சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 29 செப்டம்பர், 2014

ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது:

இன்குலாப் நேர்காணல்

சுப்ரபாரதிமணியன்

நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய, உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட..  நேர்காணல்கள் மூலம் பெறப்படும் தகவல்களும், அனுபவங்களும், அதுவும் படைப்பிலக்கியத்தின் ஒரு பகுதி என்று உணர வைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கோவை வானொலியில் கவிஞர் இன்குலாப்புடன் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்திய ஒரு நீண்ட நேர்காணல் “ ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது “ என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் இதுவரை 25 நூற்கள் எழுதியிருப்பவர். கிரேக்க நாடகங்கள் பத்திற்கும் மேற்பட்டவை இவரின் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் பெற்றவை.
இந்த நேர்காணல் படைப்பாளிக்கும், சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பு, அவனின் கலகத்தன்மை பற்றி பெரும்பாலும் பேசுகிறது.எதிர்குரலும், மாற்றத்திற்கான தன்மையும் இயங்கியலாக தொடர்வதைச் சொல்கிறது. நெருக்கடி நிலை கால கட்டம், உலகமாதல் சூழல், அது சார்ந்த படைப்பு மனம் பற்றின அக்கறைகள் ஒரு படிப்பாளி சூழலை எதிர்கொள்ள வேண்டிய அணுகு முறைகளைச் சொல்கிறது. தமிழ் தேசியம் குறித்த விவாதத்தையும் முன் வைக்கிறது.
அரசு சார்ந்த நிறுவனமான வானொலி நிலையம் சுதந்திரமாக அரசியல், புரட்சிகர விசயங்களை உரையாடலில் பகிர்ந்து கொள்ளச் செய்திருப்பது ஆரோக்கியமாகத் தென்படுகிறது. ஸ்டாலின் முன் வைக்கும் காத்திரமான கேள்விகளும், இன்குலாப்பின் சிந்தனைகளும் ஒரே அலை வரிசையில் செயப்படுவது இந்த நேர்காணலை சுவாரஸ்யமானதாக்குகிறது. உரையாடலுக்கான வெளி எவ்வளவு பரந்தது என்பதும் தெரிகிறது.உரையாடல்கள் கொண்டு செல்லும் சிந்தனைகளும், பரிமாற்றங்களும், ப்டைப்பிலக்கியத்தின் ஒரு பகுதியாக்குகிறது.
( ரூ 60, அகரம், தஞ்சை )