சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 11 ஏப்ரல், 2015


புத்து மண்ணும் ஜெயகாந்தனும்
------------------------------------------------------
 புத்து மண் “  என் நாவல் பற்றி ஆயிஷா இரா நடராசன்( புத்தகம் பேசுது) ஏப்ரல் இதழில்: படித்ததில் பிடித்தது 50 க்கு 50 பகுதியில்......
     தொடர்ந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விவாதத்தைத் தந்து களமாக்கி கொண்ட சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் அவ்வாறான ஒரு மனிதரின் குடும்ப வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கம்  அவரை மரியாதை இழந்த ஒருவராக்கி ‘ பிழைக்கத் தெரியாதவராகதனிமைப்படுத்தி அவரது வாழ்வின் அர்த்தத்தைப் பாழாக்கும் ஆபத்தைஎழுதிச் செல்கிறார்.சமூகத்தினரின் எந்த் ஆங்கீகாரமும் அற்ற ஒரு சூழலியப் போராளி பற்றிய சித்தரிப்பு வாசிக்கும் போது கொடுத்த மன வலி நீங்க நாட்களாகும்.
( புத்து மண்- சுப்ரபாரதிமணியன் நாவல் ரூ100 உயிர்மை பதிப்பகம், சென்னை )

ஜெயகாந்தன் முரண்பாடுகளின் மூட்டை : தி ஹிந்து தமிழ் பத்திரிக்கையில் ... காசு. வேலாயுதம்
---------------------------------------------------------------
திருப்பூரில் இரவு இலக்கிய கூட்டம். அதில், சுப்ரபாரதிமணியனின்         சாயத்திரை நாவலை வெளியிட்டு ஜெயகாந்தன் பேசினார்.
 . சாயக்கழிவுகளால் நொய்யல் நதி நஞ்சானது. அதற்கு காரணமான தொழிற்சாலைகளை, தொழில் முதலாளிகளை பற்றி கடுமையாக சாடினர் கூட்டத்தில் பேசியவர்கள்.
ஜெயகாந்தன் பேசுகையில் பேச்சின் நிலை தலைகீழானது. 'சாயம் விஷம். வாஸ்தவம். ஆனால் சாயம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. வளர்ச்சியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க முடியுமா? நமக்கு இப்படியொரு பொருளாதார வளர்ச்சி வந்திருக்க முடியுமா? எனவே கண்டுபிடிப்புகளை, வளர்ச்சிகளை சாடாதீர்கள். வளர்ச்சியின் வளர்ச்சியினால் வரும் எதிர்வினைகளுக்கு மாற்று வினைகளை எதிர்ப்பதற்கு பதில் அந்த நேரத்தை மாற்று விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள். அதைவிட்டு விட்டு விஞ்ஞானத்தையே கூடாது என்பதும், மறுப்பதும் எப்படி சரியாகும்?'