சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2015

” சப்பரம்  “ இப்போது மறுபதிப்பில்..

என்சிபிஎச் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் சப்பரம் நாவல் வெளியீடு:

    “ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “
        காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும்.

 “ என்று திருப்பூரில் நடந்த நாவல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள்  தெரிவித்தனர்.
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்   சப்பரம் “ என்ற நாவல் வெளியீட்டு விழா பெருமாநல்லூர் சாலை    முயற்சி “ அலுவலகத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்,       சப்பரம் “ நாவல் திருப்பூர் பகுதி நெசவாளர் குடும்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்படிருந்தது.( சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது விலை ரூ100)   நாவலை வெளியிட்டு கலால் சேவை வரித்துறை ஆணையர் ஏ.கே.ரகுநாதன் IRS -அய்.ஆர்.எஸ் ( ஓய்வு ) பேசுகையில் திருப்பூரில்  பனியன் தொழில் நிறுவப்படுவதற்கு    முன்பு நெசவுதான் பிரதான தொழிலாக இருந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நெசவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உணவு, கல்வி,  மருத்துவம் என்று அவர்களின் தேவை நிறைவேற்றப்படாததால் அவர்கள் பனியன், பவர்லூம் என்று சென்று விட்டனர்.என்றார்.நாவலின் முதல் பிரதிகளை பாரதிவாசன்( பதியம்), தமிழ்ச்செல்வி          ( சமூகநீதிப்பதிப்பகம்) , செ. நடேசன் ( தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்-முன்னாள் மாநில செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
   நாவலை அறிமுகப்படுத்திய கவிஞர் ஜோதி                “ ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு.. அது நசிந்து விட்ட்து “ என்றார்.    
              ஏற்புரை நிகழ்த்திய நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன்: “   காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும். சொசைட்டியில் நெய்யும் நெசவாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள். சொசைட்டிகள்  பெரும்பாலும் ஊழல் மயமாகவும், அரசியல்வாதிகளின் பிடியிலும் உள்ளன. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில்  தோளில் கைத்தறி துணிகளைப் போட்டு விறப்னை செய்து முன்னோடிகளாக இருந்தனர். தொழிலாளி அந்தஸ்து, உரிமைகள் பெற  நெசவாளர்களின் ஒன்றுபடுதலும் போராட்டமும் தேவை. அப்போதே அவர்களுக்கு ஓரளவு சமூக பாதுகாப்பு கிடைக்கும்.உலகமயமாக்கல் கைத்தறி நெசவு போன்ற புராதன தொழில்களை ஒழித்துக் கொண்டு வருகிறது.இயந்திரமயத்தில் அவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை.  அது நெசவோ, மர வேலையோ.... எம்பிஏ படித்தவன் 5,000 ரூபாய்க்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன்  சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை  நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் ஆக்குகிறான். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை..என்றார்
   கருணாமனோகரன் எழுதிய “ சாதி-வர்க்கம்-தேசியம்நூல் பற்றி செ, நடேசன், தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். கருணாமனோகரன் திருப்பூரில் வாழ்ந்து மறைந்த மார்ச்சிய சிந்தனையாளர். அவரின் 7 நூல்களை சேர்த்து கோவை சமூக நீதிப் பதிப்பகம்“ சாதி-வர்க்கம்-தேசியம்”  என்ற நூல் வெளியிட்டுள்ளது.( ரூ 400 விலை ) முன்னதாக கனல்மதி,பாரதிவாசன், சிவதாசன், ரகுசெல்லம், ரத்தினமூர்த்தி , மதுராந்தகன்,அரசபாண்டியன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் காங்கயம் சு.மூர்த்தி         “ போபால் கல்வி யாத்திரை “ என்ற தலைப்பில் பேசினார். கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்), சிதம்பரம்( முயற்சி ), குமார் ( தமிழ் வளர்ச்சித் துறை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழ,விசுவநாதன் நன்றி கூறினார்.