சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 29 நவம்பர், 2015

நீர்த்துளி
சுப்ரபாரதிமணியன்   நாவல்
----------------------------------------

      நீர்த்துளி நாவல் ஆசிரியரின் 36ஆவது நூல். சொல்ல முடியாத உறவு முறையை மிக இலாவகமாகச் சொல்லி அதிலிருந்து நம் வாழ்வின் நெறிமுறைகள் மாறக்கூடாது என்பதற்காக வெகுசாமர்த்தியமான முடிவினை எடுக்கும் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் போல மிக சிக்கலான முடிச்சினைக் கூட மிக சாமர்த்தியமாக அவிழ்த்திருக்கிறார் ஆசிரியர். .
      தன்னை சந்தேகப்படும் கணவன் சுந்தர வடிவேலுவை பிரிந்து வாழும் கலா. தன் குழந்தைகளையும் பிரிய நேரிடுகிறது. தன் கணவனிடம் விவாகரத்திற்காக காத்திருக்கிறாள். திருப்பூர் சாயப்பட்டறையை மையமாக வைத்த கதை. நாயகி கலாவும், நாயகன் லிங்கனும் கம்பெனியிலேயே வேலைச் செய்கிறார்கள். சாயநீர் விவசாய நிலத்தினை பாழ்படுத்துவதால் சாயப்பட்டறை மூடப்படுகிறது. இந்த கடினமான சூழலில் வாழும் இவர்களின் முறையற்ற வாழ்க்கை. இருவரிடம் அன்பு, காதல் குறைவு. ஆனால் காமம் மட்டுமே அதிகமாக இருக்கும். வறட்சியான வாழ்க்கையை வார்த்தைகளால் படம் எடுத்திருக்கிறார். நாயகனுக்கு அறிவுரை வழங்கும் ஜேக்கப் நல்ல நண்பர். நல்ல நண்பர்களால் தான் மனம் சிதைவுறாமல் வாழ முடியும். வாடகை போர்ஷனில் ஆரம்பிக்கப்படும் வாழ்க்கை, எத்தனை கேள்விகள்எத்தனை மறைவுகள், எத்தனை அவமானங்கள் இவற்றையும் தாண்டி பணம். இவற்றிற்கு மத்தியில் இவர்களின் காமம் மட்டுமே மிகுதியாக தென்படும் நிலை இல்லாத வாழ்க்கையை ஒவ்வொரு காட்சியிலும் வடித்துள்ளார் ஆசிரியர்.
      மூன்று மதங்களின் பெருமைகளைப் பற்றியும், அவற்றை பின்பற்றும் வழிமுறைகளை தனது சிறந்த சேகரிப்பால் வெளிப்படுத்துகிறார். பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய தாக்கத்தையும் சமுதாய விழிப்புணர்வோடு தந்திருக்கிறார். பணம் வாழ்க்கையின் அங்கம் என்பதை சாயத்தொழிற்சாலைகள் மூடலுக்குப்பின் வரும் தற்கொலை சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். இதேநிலைதான் புதுவை பஞ்சாலை மூடலுக்கு பின் கடன் தொல்லையால் கொத்து கொத்தான சில குடும்பங்களில் தற்கொலை சம்பவம். மிகவும் வருந்ததக்க காலம் அது.
      பக்கம் 142-ல் உள்ள குறுஞ் செய்திகள் ரசிக்கத் தக்கன. பல இடங்களின் விலங்குகளின் மீது உள்ள இரக்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். உதாரணத்திற்கு நத்தை ஓட்டை சொல்லலாம். முதல் காட்சியில் இடம் பெரும் மன நல மருத்துவமனை காட்சி நம்மை ஆர்வம் கூட்டி படிக்கத் தூண்டுகிறது. முதலாவது காட்சி நாற்பத்து நான்காவது காட்சியுடன் தொடர்பு கொள்ளும் விதமாக ஆசிரியர் கோர்வையுடன் காட்சியை நகர்த்தியுள்ளார்.
      எதிர்காலத்தை நினைவில் கொள்ளாமல் நிகழ்காலத்தை பற்றி மட்டும் கருதி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் மூடல் பல மக்களின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி விட்டகதை நீர்த்துளி.

- சி. இராஜேஸ்வரி

(   விலை: ரூ. 160, பக்கங்கள்:208;   வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600 018. தொலைபேசி: 91-44-24993448  )
சுப்ரபாரதிமணியனின் " திரைவெளி

                 திரைப்பட நூல்


 "ஒளிப்பதிவாளர் செழியன்
----------------------------------------
-----------------------------------------------
சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி
------------------------------------------------
-உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்.
-----------------------------------------------------------------------------------------------
நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென " திரைவெளி "வந்திருக்கிறது.
செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் "ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்" என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், 'இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது' (.62) என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்ஸல் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்('எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியுன் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்..65) மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(.116).
உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. 'ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்", தெலுங்கு திரைப்பட உலகம் 88' போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.( .22).
படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள்றவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன.
பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது.

= செழியன்

(திரை வெளி:  ரூ 100 அம்ருதா பதிப்பகம், சென்னை )