சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஜனவரி, 2016

திருப்பூர்  எழுத்தாளர்களின்  தொகுப்பு “ டாலர் நகரம்  “ வெளியீடு
--------------------------------------------------------------------
கனவு இலக்கிய வட்டத்தின் ஜனவரி மாதக்கூட்டம் வியாழன் மாலை திருப்பூர் பாண்டியன் நகர்  அம்மா உணவகம் அருகிலான சக்தி பில்டிங்கில் நடைபெற்றது  கவிதை ஜோதி தலைமை தாங்கினார்.. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் திருப்பூர்  எழுத்தாளர்களின்  இவ்வாண்டுத் தொகுப்பு           “ டாலர் நகரம்  “ நூலை வெளியீட கலாமணி கணேசன் ( தலைவர், சக்தி மகளிர் அறக்கட்டளை ) பெற்றுக்கொண்டார். நாவலாசிரியர் செந்தமிழ்வாணன், பேச்சாளர் பவானி வேலுச்சாமி, பட்டு நடராசு, விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலை வெளியிட்ட சுப்ரபாரதிமணியன் பேச்சில்:
கனவு இலக்கிய வட்டத்தின்  இத்தொகுப்பு திருப்பூர் நகரின் நிகழ்வுகளையும் சமூக சூழலையும் வெளிப்படுத்தும் விதமாய் படைப்புகளை  உண்மையில்தான் அழகு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  எந்த வகையான நுகர்வு சூழலாக இருந்தாலும்   உண்மை படைப்புகள் என்பது  நிகழ்கால தரிசனங்கள் என்பதை உணர்த்தும் படைப்புகள் எப்போதும் வெற்றி பெறும். .ஒவ்வொரு எழுத்தாளனும் சமூகத்தின் அங்கமே.சமூக விளை பொருளே அவன் படைப்புகளும்..அவை சமூக தாக்கத்தால் வந்தவையே. ..மானுட விழுமியங்களுக்கு எதிரான விசயங்களே இன்று நம்மை ஆள்கின்றன. கல்வி என்பது அறிவியலைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. வாழக்கையின் அறவியலைக் கற்றுக் கொடுப்பதும், கடை பிடிக்கச் செய்வதுவுமாகும். பகுத்தறிவு சார்ந்த , தாய்மொழி சார்ந்த கல்வியே  ஒரு மனிதனை சமூக அக்கறை கொண்டவனாக்கும். அதற்கு இலக்கியப் படைப்புகளும், இது போன்ற உள்ளூர் படைப்பாளிகளின்  அனுபவங்களும்  பயன்படும்.
கனவு இலக்கிய வட்டம்  “ ஆண்டுதோறும் திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய நூலை வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டுகளில் பருத்திக்காடு, பருத்தி நகரம், பனியன் நகரம் ஆகியத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது  கனவு இலக்கிய வட்டம். இவ்வாண்டில் அவ்வாறே             டாலர் நகரம் “ தொகுப்பு அமைந்திருக்கிறது. இத்தொகுப்பில் சுப்ரபாரதிமணியன், சு.மூர்த்தி,, வழக்கறிஞர் குணசேகரன், ஜோதிஜி, உதயம் பக்தவச்சலம், ஆ. அருணாசலம், கவிஞர் ஜோதி, வெங்குட்டுவன் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன . விலை ரூ70. தற்போது நடந்து வரும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் முக்கிய அரங்குகளில் கிடைக்கும். (  டாலர் நகரம் “ தொகுப்பு : திருப்பூர் கனவு இலக்கிய வட்டம்  வெளியீடு , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. )
செய்தி : கவிஞர் ஜோதி ( கனவு இலக்கிய வட்டம்  )