சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

, “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் செய்யத் தவறியதும் செய்யவேண்டியதும்





, “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் செய்யத் தவறியதும் செய்யவேண்டியதும்என்ற தலைப்பில் மூத்த கல்வியாளர் முனைவர் வே. வசந்திதேவி அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சமச்சீர்க் கல்விக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் கல்வியாளருமான ச,சீ.இராசகோபாலன், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் மு.நாகநாதன், சென்னைப் பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர் பேராசிரியர் ரா.மணிவண்ணன், மூத்த சிந்தனையாளர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ராஜ்மோகன், வழக்கறிஞர் பி.தர்மராஜ், வட அமெரிக்கா தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நாஞ்சில் இ.பீற்றர், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மு.திருமலை தமிழாசான், தமிழ்தேசியப் பேரியக்கத்தின் மா.இராமதாசு, தமிழ்வழிக் கல்விக் கழகத்தின் வெற்றிச்செழியன், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.சீதரன், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.இரா.சுப்பிரமணியன், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.விசுவநாதன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.து.செளந்தரராசன், இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ், தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சே.இளையராஜா, பேராசிரியர் பெ.விஜயகுமார் (மூட்டா) மக்கள் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சே. கோச்சடை, குழந்தைகளைக் கொண்டாடுவோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுடரொளி, சமத்துவக்கல்வி இதழின் ஆசிரியர் சியாம்சுந்தர், அறிவாயுதம் இதழ் ஆசிரியர் ஏ.இரமணிகாந்தன், வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வாழவேண்டுமென்றால், வளரவேண்டுமென்றால், எதிர்காலம் நம்பிக்கை அளிக்கவேண்டுமென்றால், நம் கல்வி அமைப்பில் மிகப்பெரும் மாற்றம், புரட்டிப்போடும் புரட்சிகர மாற்றம் தேவை. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த எழுந்த வற்புறுத்தல்களைப் போல நாட்டின் எதிர்காலத்தை, குழந்தைகளின் எதிர்காலத்தை, நிகழ்காலத்தைக் காக்க வற்புறுத்தல்கள் உருவாகவேண்டும். இந்த வற்புறுத்தல்கள் ஆட்சியாளர்களுக்கும், கல்விக் கொள்கை வகுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பேரழுத்தம் கொடுக்கும் வகையில் மாறவேண்டும்.. இப்பணியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மக்கள் கல்விப் பறைசாற்றம் வெளியிடுவதென கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
இவ்வலியுறுத்தல்களின் முதல் செயல்வடிவமாக இந்த மக்கள் கல்விப் பறைசாற்றம் வெளியிடப்படுகிறது. கல்வி வணிகமயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுப்பள்ளி முறையில் அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழிவழியில் அரசின் பொறுப்பில் விலையில்லாக் கல்வி கிடைத்திட இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான செயல்வடிவங்கள் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் இருந்தும் உருவாகவேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு விரும்புகின்றது.
மேலும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு உருவாக்கும் கல்விப் பறைசாற்றம் அனைவரின் கருத்தளிப்புடன்  அமையவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.