சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 15 ஏப்ரல், 2016

* நீரின்றி அமையாது உலகு

சுப்ரபாரதிமணியன்
            "அவர்கள் நம் நதிகளை விற்றார்கள்
      நமது கிணறுகள், ஏரிகள்
            ஏன் நம் தலைமேல் விழும் மழையைக்
            கூட விற்றார்கள்.
           
லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய
            கம்பனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது
            இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்
            நமது மூச்சுக் காற்றிலிருக்கும்
            நீர்த்துளிகளையா?
            அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும்
           
வியர்வைத் துளிகளையா?"
            தண்ணீர் தனியார் மயமாக்கலை எதிர்த்து போராடும் மக்கள் மத்தியில் 'ஈவன் ரெயின்' என்ற ஸ்பானியத் திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் இது).
            உலகில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அய்.நா.சபை "வாழ்விற்கான தண்ணீர்" என்ற முழக்கத்தை முன் வைத்து 2005 ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை பல்வேறு திட்டங்களைத் தீட்டி உலக நாடுகளில் பல்வேறு பணிகளை நடத்தி வருகிறது. 'உலகில் இன்னும் 50 ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். உணவு பொருள்களின் உற்பத்தி குறைந்து வருவதன் மத்தியில் உணவுப் பொருட்களின் தேவையும், சுமார் 300 கோடி உலக மக்களின் கழிவறை வசதித் தேவைகளும் பல சிக்கல்களை உருவாக்கும். நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதும் சிக்கல்களை உருவாக்கி வருகிறது.
      உலக நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது இன்னும் தீவிரமாக இருக்கும். கடல் நீரை குடிநீராக்குவது, மழை நீரை குடிநீராகப் பயன்படுத்துவது, தேவை ஏற்பட்டால் கழிவு நீரையும் குடிநீர் ஆக்குவது, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது போன்றவை மனதில் கொள்ள வேண்டியதாகிறது.
      தமிழகத்தின் சராசரி மழையளவு 1000 மி.மீ. இது நமக்கு கிடைப்பது சமீப ஆண்டுகளில் அரிதாகிக் கொண்டேயிருக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றும், வட கிழக்கு பருவக் காற்றும், கோடை மழையும் கணிசமாக மழையைக் கொண்டு வருகின்றன. வட இந்தியாவின் பல நதிகளில் ஓடும் நீரின் அளவில் இது குறைவே. கங்கையில் ஆண்டுக்கு ஒரு வாரம் ஓடும் வெள்ளநீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டுத் தேவையாகும். கடந்த பத்தாண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது இன்னும் பத்தாண்டுகளில் இன்னும் தீவிரமாகும்.
      தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதில் குழந்தைகள் அதிகமாயும், பெண்கள் கணிசமாயும் உள்ளனர்.
      "நீருக்கு பொருளாதார மதிப்பு உள்ளது. இதை ஒரு வணிகப் பண்டமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. "நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டி மிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் தண்ணீரை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம் முயற்சியால் தண்ணீர் ஏழைகளுக்கு கிடைப்பதை விட பண பலம் கொண்டவர்கள் செலவிடும் தொகைக்கு சாதாரணமாகக் கிடைத்து விடுகிற நிலை வந்து விட்டது.
            தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியா நிகாரகுவா, ஆப்ரிக்காவில் மொசாம்பிக், கென்யா, கானா, பர்கினபாசோ, ஈக்வடார், தான்சானியா போன்ற நாடுகளில் தண்ணீர் தனியார் மயம் சுலபமாகி விட்டது. திருப்பூரில் அமுல்படுத்தப்பட்ட மூன்றாம் குடிநீர் திட்டமும் இவ்வகையில் பொதுமக்கள், தனியார், கூட்டுப் பங்கீட்டை இன்னொருவகையான தனியார் மயத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
            தனியார் துறை, இந்த வணிகத்தில் நுழைவதற்கு பலவகைகளில் வரி விலக்கு அளித்து ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பல மாநில அரசுகள்  முறையற்று செயல்பட்டன. இப்போது எல்லா மாநிலங்களின் போக்கிலும் இதைக் காணலாம்.
            பொலிவியாவில் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டது. சட்டிஸ்கர் மாநில அரசு சியோநாத் நதியின் ஒரு பகுதியை ரேடியல் வாட்டர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் அந்நதியின் கரையில் வாழும் மக்களின் மீன்பிடிக்கும் தொழிலும், நீரைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி தங்கள் உரிமையை மீட்டனர்.
            நீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.
            வளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.
            இந்த வகை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.
            இவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.
            21ம் நூற்றாண்டின் ஏற்படும் போர்கள் நீருக்கானதான இருக்கும் என்று திரும்பத் திரும்ப ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
            குடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் நீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.
            "நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்" என்கிறார் சூழலியல் போராளி வந்தனா சிவா.
            1300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சிகள் குடிநீர் வழங்குவதை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்ற திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
            ஆயிரம் லிட்டருக்கு 45 ரூபாய் என சொல்லப்பட்டது. இந்த திட்டத்தின் படி அதிகபட்சமாய் சாயப்பட்டறைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள 800 கிராமங்களுக்கு குடி தண்ணீருக்கான சாயப்பட்டறைகளுக்கு வழங்கப்படுவதில் பாதிதான் வழங்கப்படுகிறது. பவானி ஆற்றிலிருந்து ஒரு மில்லியன் லிட்டர் நாள் தோறும் எடுத்துக் கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டு குறைந்தட்ச கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அது வேறு நிறுவனத்திற்கு விற்பனையாகிறது. சிவகங்கையில் சர்க்கரை ஆலை ஒன்று நாள்தோறும் 1 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி இன்னொரு தனியார் நிறுவனத்திற்கு விற்கிறது. தாமிரபரணியிலிருந்து நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு அது வெறுமனே 6,000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அது தனியார் குளிர்பானக் கம்பனியால் பல லட்சங்களுக்கு விற்பனையாகிறது.


சுப்ரபாரதிமணியன்.,      8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.          9486101003