சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 14 ஜூலை, 2016

ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள்
 எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
                                 செ. கிருத்திகா

சுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது  நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.                      மண்புதிது  “என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக்கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருகின்றன.   அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக்கிறதா  என்று தெரியவில்லை. இப்போது  என்சிபிஎச் வெளியீடாக “ எட்டுத் திக்கும்என்ற பயணக்கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. அதில் இங்கிலாந்து , ஜெர்மனி,பிரான்ஸ், வங்காள தேசம், மலேசியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் கண்டது, இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்ற போது அவர் மனதில் எழுந்ததை பிறகு அவற்றைப்பற்றி எழுதியவற்றை தொகுத்ததில் சில கட்டுரைகள் உள்ளன..வெளிநாட்டு அனுபவங்கள் முதல் உள்ளூர் மற்றும் சொந்த கிராம அனுபவங்களை வரை சிலகட்டுரைகளும் இதில் உள்ளன.
வெளிநாட்டுப்பயண அனுபவங்களில் அந்தந்த நாடுகளின் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.அங்கு சந்தித்த எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் இலக்கியப்படைப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். அரசியல், திரைப்படம் என்று பல விசயங்களை அவை கோடிடுகின்றன.இலக்கிய கூட்டங்களுக்குச்  சென்றதை பதிவு செய்திருப்பதில் அவ்வப்போதையை இலக்கியச்சமாச்சாரங்கள், புத்தகங்கள்  பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. வெளி மாநிலங்களில் நடைபெற்ற சாகிதய அகாதமி, கதா விருது கூட்டங்கள் போல் பல சுவாரஸ்யமானவை அவை. காசியின் கங்கை ஆறு முதல் சென்னை கடற்கரை வரைக்கும் பல  இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.திருப்பதி இலக்கிய கூட்டத்தில் உட்கார்ந்து கவிதைகளை மொழிபெயர்த்த்தைத் தந்துள்ளார். புளியம்பட்டி போன்ற சின்ன ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். கம்பம் போன்ற சிறு ஊர்களில் நடக்கும் இலக்கிய பரிசளிப்பு பற்றி எழுதியிருக்கிறார். கம்பம் பற்றி எழுதும்போது சுருளி அருவி பற்றி எழுதாமல் இருக்க முடியுமா, அதைப்பற்றியும் எழுதியிருக்கிறார். பகுத்தறிவுப்பார்வையுடன் பக்தி விசயங்களை பல கட்டுரைகளில் கிண்டல் அடித்திருக்கிறார். உலக அளவிலான பல முக்கிய விசயங்களை முன்னிருத்துகிறார். உதாரணத்திற்கு அகதி நிலை.  கல்வி வணிகமயமாக்கலை எதிர்த்த கல்வி யாத்திரைகளைப் பற்றியும் எழுதி கல்வி பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார். ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் இவை .பல யாத்திரைகள் பற்றிய கூட்டுக்கட்டுரை இந்நூல்..

( எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்          என்சிபிஎச், சென்னை   வெளியீடு ரூ110 )