சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 1 செப்டம்பர், 2016

                                          
            கனவு இலக்கிய வட்டம் 
    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
     

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி  பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஒரு வாரம் நடந்ததையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி              

சுற்றுச்சூழலைக் காப்போம் “ என்ற தலைப்பில் நடந்ததற்கான பரிசளிப்பு விழா பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் வடக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறுப் பள்ளிகளின்  210 பேர் ஓவியப்போட்டியில் பங்கு பெற்றனர். சிறந்த எட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பரிசுகளை வழங்கினார். மனோகர் முன்னிலை வகித்தார். கண்ணன் தலைமை தாங்கினார்.  கூத்தம்பாளையம் முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, பூலுவபட்டி ஏவிபி மெட்ரிக்குலேசன் பள்ளி , பாண்டியன்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி , பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி, ராஜீவ் காந்தி நகர் சாரதா வித்யாலயா  பள்ளிகளைச் சார்ந்த எட்டுப்பேர் பரிசுகளைப் பெற்றனர்.ஓவியக்கலையின் உயர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார். குழந்தைகள் புத்தகக் கண்காட்சி   சார்ந்த அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

செய்தி : ஆ . ரூபா