சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 அக்டோபர், 2017

                             கனவு இலக்கிய வட்டம்
---------------------------------------------------------------------
                    நூல்கள் வெளியீடு / அறிமுகம்




கனவு இலக்கிய வட்டம் “ அக்டோபர் மாதக் கூட்டம்  பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான அலுவலகத்தில் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. தலைவர் கலாமணி கணேசன்  தலைமை  தாங்கினார்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தமிழறிஞர் சொக்கலிங்கம் வெளியிட சமூக ஆர்வலர்   மோகன்குமார் பெற்றுக்கொண்டார்.இந்த நூலை  பேரா. முனைவர் த .தமிழரசி எழுதியுள்ளார். இவர் கோவை அவனாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றும் சென்னையிலிருந்து வெளிவரும் “ இலக்கியச் சோலை “ மாத இதழ் வெளியிட்டுள்ள திருப்பூர் சிறப்பிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் திருப்பூரைச் சார்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், தொழிலதிபர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தஞ்சை அம்மா வெளியீட்டகம் .வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 210 விலை ரூ 200.

இக்கூட்டத்தில் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் : “ படைப்பிலக்கியம் என்றைக்கும் குறிப்பிட்டவர்களாலேயே வாசிக்கப்படுவது. அதிலும் மொழி சார்ந்த இலக்கியத் துறைமாணவர்களால்அதிகம் வாசிக்கப்படுகிறது. அதை மீறிய  பொது எழுத்து வாசிப்பு சாதாரண எழுத்துக்களாக உள்ளன. பரபரப்பு உலகத்தில் சரியான தீனி அது. இப்போதைய தீனி மசாலா கலந்த உடனடி  சுவை கொண்டது. இலக்கிய வாசிப்பிற்கு ஆட்களைக் கண்டடைவது  குதிரைக்கொம்புதான் . ஆனால் இலக்கியம் எப்போதும் காலத்தின் கண்ணாடியாக விளங்குவது என்றார். விஜயா நன்றி கூறினார்..