சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

  நூல்கள்  வெளியீடு:


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.           திருப்பூர்  மாவட்டம் * பிப்ரவரி  மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு  மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது .
3 நூல்கள் வெளியீடப்பட்டன :
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “
*. சுப்ரபாரதிமணியனின்  ஆங்கில நூல் Migration 2.0 – சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வெளியிட வெண்மணி நடராசன் பெற்றார்.
 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘நாவல் முடியரசு வெளியிட  சசிகலா, இரத்தினமூர்த்தி பெற்றனர்
* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “- கட்டுரைத் தொகுப்பை  பேரா. சுந்தரம் வெளியிட  முனைவர் மனோகர் பெற்றார்.


* நூல்கள்   அறிமுகம்..:  *
உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல் பற்றி   தோழர் வடிவேல்* நூல் அறிமுகம்  நிகழ்த்தினார் ..:  *

 -   அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர் ஓடை.துரையரசன் நிகழ்த்தினார் ..:  *

* உரைகள் : படைப்பு அனுபவம்
- திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன் பேசினார்
*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா
-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)
-தொடர்ந்து படிகளில் ( சுப்ரா), கண்மறைத்துணி ( பிரதீபன் )
*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்
...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன.யோகி செந்தில், பாரதி இளந்தமிழர் சங்க நிர்வாகிகள் பாரதி வாசன், முத்து பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடம் பெயர்ந்தவர்களின் அனுபவ்ங்களை நூலாக்கிய அனுபவத்தை ஆங்கில நூல் Migration 2.0 சுபரபாரதிமணீயன் பகிர்ந்து கொண்டு இவ்வாறு பேசினார்.
போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத  தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்

 திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று...  அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு  சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும்  தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும்  5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப  அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.என்றார்


.                                            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488