சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 4 மார்ச், 2018

உலக காட்டுயீர் தினம்
----------------------
உலக காட்டுயீர் தினம் ( மார்ச் 3 ) தாய்த்தமிழ்ப் பள்ளி பாண்டியன் நகரில் கொண்டாடப்பட்டது. திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின் தலைவர் இரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார் . மருத்துவர்  முத்துச்சாமி ,கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை பங்கு பெற்றனர் .

திருப்பூர் இயற்கைக் கழகம் அமைப்பின் தலைவர் இரவீந்திரன் சிறப்புரை :

பல்வேறு பூமி வாழ் உயிரினங்கள் வெகு வேகமாக அருகி வரும் உயிரினங்களில் பட்டியலில் சேருவது கவலை தரும் ஒரு விஷயம்! பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என இப்படிப் பல்வேறு படைப்புகளைக் காப்பது மனிதனின் கடமை.. நமது பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய முழுச் செய்திகளையும் அறிதல் அவை எவ்வளவு இன்றியமையாதன் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.
 நமது இல்லங்களை மிகவும் சுத்தமாக இருக்கும்படி செய்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது, வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் தொந்தரவு இருக்காது.உர வகைகளை அளவுக்கு மீறி நமது தோட்டங்களில் பயன்படுத்தும் போது உடனடிப் பலன்கள் ஏற்படுவது போலத் தோன்றினாலும் நீண்டகாலத் தொலைநோக்கில் பார்த்தால் அவை மண்ணின் வளத்தை அரிப்பவை என்பது தெரியவரும். இவை விலங்குகளையும் அழிக்கக் கூடியவை என்பதால் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தல் நல்லது..
 ( செய்தி: கி .கிருஷ்ணகுமாரி, தலைமையாசிரியை
 பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி )